சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

129

பெயரும்,   மற்றும்   அவற்றுப்பாலே  படும் எனக் கொள்க. மற்றையது,
மற்றையன, பிறிது, பிற என்பனவுங் கொள்க. பிறவும் அன்ன.       (16)

அஃறிணை இயற்பெயர் பாலுணருமாறு
 

174.தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.
 

என் - எனின்,  மேற் புறனடையுள்  பால்  அறிய  வருவனவற்றோடு
ஒன்றாக  ஓதப்பட்ட  இயற்பெயர்கள்  பாலறிய   வருமாறு  உணர்த்தல்
நுதலிற்று.

(இ - ள்.) அஃறிணையிடத்து ஒருமையும்  பன்மையுமாகிய  பால்கள்
எப்பொழுது     தெரிவதெனின்    பால்    காட்டும்     வினையொடு
வரும்பொழுது, (எ - று.)

(எ -  டு.) ஆ  வந்தது,  ஆ வந்தன எனவும் வினையால் பாலறிய
வந்தவாறு கண்டுகொள்க.                                    (17)

விரவுப்பெயர்
 

175.இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமையின்
திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே.
 

என்  -   எனின்,   நிறுத்த   முறையானே   விரபுப்   பெயராமாறு
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  இருதிணைப்  பொருட்கும்  ஒன்று   போன்ற   உரிமை
காரணமாக     அவ்வத்திணைக்கண்      செலவு      வரவுடைத்தாய்
உயர்திணைக்கண்     சென்றகாலத்து    உயர்திணைப்     பெயராயும்
அஃறிணைக்கண் சென்ற காலத்து  அஃறிணைப்பெயராயும் வேறுபடுகின்ற
விரவுப்  பெயர்களெல்லாம்  ஆராயுங்  காலத்து  அவ்வத்   திணையே
யுணர்த்துதற்குரிய முறைமையினையுடைய வினைச் சொற்களான் அல்லது,
திணைதெரிதல் இல, (எ - று.)

(எ - டு.)சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது எனவரும்.

வினையானேயன்றித்  தத்தம்  மரபிற் பெயராலும் திணையறியப்படும்
என்பது.

(எ - டு.)சாத்தன் ஒருவன், சாத்தன் ஒன்று என வரும்