சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

133

என்  -  எனின்,  சினைப்பெயர்  நான்கு  என்றமையின்  அவற்றது
பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.)    பெண்மைச்       சினைப்பெயரும்,      ஆண்மைச்
சினைப்பெயரும், பன்மைச் சினைப்பெயரும்,  ஒருமைச்  சினைப்பெயரும்
எனப்பட்ட    அந்நான்கும்    என்று    சொல்லுப    சினைப்பெயரது
நிலைமையை,  (எ -று.)                                    (23)

சினை முதற்பெயர் நான்கு எனல்
 

181. 

பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்
றந்நான் கென்ப சினைமுதற் பெயரே.

 

என்   -   எனின்,   சினைமுதற்பெயரும்   நான்கு   என்றமையி்ன்
அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.)  பெண்மை  சுட்டிய  சினைமுதற்  பெயரும்,  ஆண்மை
சுட்டிய  சினைமுதற்பெயரும்,   பன்மை  சுட்டிய  சினைமுதற் பெயரும்,
ஒருமை  சுட்டிய  சினைமுதற் பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று
சொல்லுப சினைமுதற்பெயர், (எ - று.)                       (24)  

முறைப் பெயர் இரண்டு எனல்
 
  

182. 

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்
                          [பெயரென்
றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.

   

  என்   -    எனின்,    முறைப்பெயரும்    இரண்டு   வகைப்படும்
என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.)  பெண்மை  முறைப்பெயரும், ஆண்மை முறைப்பெயரும்
எனப்பட்ட   அவ்விரண்டும்    என்று  சொல்லுப  முறைப்   பெயரது
நிலைமையை, (எ - று.)                                    (25)

பெண்மை சுட்டிய பெயர்
 

183.பண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.