சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

137

எல்லாம் என்னும் விரவுப்பெயர்
 

189.

1எல்லாம் என்னும் பெயர் நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.
 

என் - எனின்,   எல்லாம்   என்னும்  சொல்  திணைக்குரித்தாமாறு
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)   எல்லாம்    என்று     சொல்லப்படும்    பெயராகிய
நிலைமையையுடைய சொல்  இருதிணைப்  பன்மையிடத்தையும்  கருதிய
நிலைமைத்தாகும்,  (எ - று.)

(இ - ள்.) எல்லாம்  வந்தார்,  எல்லாம்  வந்தீர்,  எல்லாம் வந்தன,
எல்லாம் வந்தேம் எனவரும்.

வாளா  பன்மை  என்றமையின்  இரண்டிடத்தும்  ஆண் பன்மையும்
பெண் பன்மையும் கொள்க.                                 (32)

மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல்
 

190.

தன்னுள் ளுறுத்த பன்மைக் கல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.

என் - எனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.
 

(இ - ள்.)   மூன்றிடத்தும்    இருதிணைமேலும்    சென்றமையின்
தன்மையிடத்து   அஃறிணைக்கண்   ஆகாது  என்றமையான், எல்லாம்
என்னும்   சொல்    சொல்லுவான்   தன்னை   உள்ளுறுத்து   அஃது
அஃறிணை  மொழி   கூறாமையின் அஃறிணைத்  தன்மைப் பன்மைக்கு
உயர்திணை யிடத்தல்லது அஃறிணையிடத்து ஆகுதல் இல்லை,(எ- று.)

உயர்திணை மருங்கின் அல்லது என மொழி மாற்றிக் கொள்க.

(எ - டு.)எல்லாம் உண்டும் என்பது

மற்று  இஃது அஃறிணை மொழி கூறாமையின்  அஃறிணைத் தன்மை
இல்லை   என்பது  பெறுதுமாகலின் இது கூறல் வேண்டா எனின், மேல்
“பல்வழி   நுதலிய   நிலைத்தாகும்”  என அதற்கு விதி சென்றமையி்ன்
அது விலக்கல் வேண்டும் என்பது.

மற்று  எல்லாம்  உண்டும்  என்ற தன்மைக்கண் வருகின்ற வரவினை
உயர்திணைப்  பெயராக  வேறோதற்பாற்று  எனின், எல்லாம்   என்பது


1. இதனையும் அடுத்த  நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக்
கொள்வர் தெய்வச்சிலையார்.