என் - எனின், முன்னிலைப் பன்மை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இர், ஈ,ர், மின் என்று சொல்ல வருகிற மூன்று ஈற்றுச்சொல்லும் உயர்திணைக்கண் பல்லோரிடத்தும் அஃறிணைக் கண் பலவற்றினிடத்தும் சொல்லுதலை ஒருதன்மையாக வுடைய என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) (எ - டு.) இர் - உண்டிர் உண்ணாநின்றிர் உண்பிர் எனவும், கரியிர் எனவும் வரும். ஈர்:-உண்டீர், உண்ணாநின்றீர் உண்பீர் எனவும், கரியீர் எனவும் வரும். மின்:-உண்மின் தின்மின் என எதிர்காலமே பற்றிவரும். உண்ணா நின்மின் என நிகழ்காலவரவு உண்டேனும் கொள்க. இவ்வீறு ஏவற் கண்ணே வருவது எனக் கொள்க. உண்டிலிர் உண்ணாநின்றிலிர், உண்ணலிர் எனவும்; உண்டிலீர், உண்ணா நின்றலீர், உண்ணீர் எனவும்; உண்ணன்மின் எனவும் வரும் மறையும் அறிக. மேலைச் சூத்திரத்து எதிர்காலமொன்றினும் வரும் இகரம் முற்கூறினமையான் ஒழிந்தமுன்னிலையீறும் கொள்ளப்படும். அவையாவன:-மொழிக்கீறாம் எனப்பட்ட இருபத்துநான் கீற்றுள்ளும் எடுத்தோதியவையொழித்து ஒழிந்தன எனக்கொள்க. (எ - டு.) நட, வா, விரி, ஈ, கொடு, கூ, மே, கை, நொ, போ, வௌ என இவை உயிரீறுள் எடுத்தோதாதன. இவை முன்னிலை ஏவலொருமை. எடுத்தோதின இகர ஐகார வீற்றுள்ளும் அறியெனவும் உரையெனவும் ஏவற்கண் வருவனவும் அறிந்துகொள்க. உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், தெவ், தாழ், கொள்என இவை புள்ளியீறு பதினொன்றும் வந்தவாறு. ஊட்டு என்பது குற்றியலுகரவீறு. இதுவும் ஏவலொருமை. 1ஆய் எனவும். இர், ஈர் எனவும், மின் எனவும் ஓதினமையின் யகர னகரங்களில் ஐகாரங்கொள்ளவெண் ... ... ... னின் அவை அவ்
1. இப்பகுதி சிதைந்துள்ளது. |