சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

175

என்ன  கிளவியும்  என்றதனால் பான், பாக்கு, வான், வாக்கு எனவும்
பிறவாறும் வருவன கொள்க.

(எ - டு.)  உண்பான்  வந்தான்,  உண்பாக்கு வந்தான், கொள்வான்
வந்தான், கொள்வாக்கு வந்தான் எனவரும்; பிறவுமன்ன.

ஆக   வினையெச்சவாய்பாடு எடுத்தோத்து வகையான் பதினைந்தும்,
தந்திரவுத்தி   வகையானும்   இலேசானும்   நோக்கப்   பலவகையாயும்
முடிந்தது.   இலேசு   என்பது... ... ... ... ... ... ...யந்து  கூறல். குறிப்பான்
வெளிப்படுப்பது.                                       (31)

வினைமுதல் கொண்டு முடியும் வினையெச்சங்கள்
 

232. அவற்றுள்
முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.
 

என்  -   எனின்,   அக்கூறப்பட்ட   எச்சங்களுள்   முதற்கணின்ற
மூன்றற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறப்பட்ட  வினையெச்ச வாய்பாடுகளுள்  முதற்கண்
எடுத்தோதப்பட்ட   செய்து,    செய்யூ,   செய்பு  என்னும்   மூன்றும்
அவ்வெச்சவினையை     நிகழ்த்தின     கருத்தாவினது     வினையை
யுணர்த்துஞ் சொல்லினையே பின்பு முடிபாகக் கொண்டு முடியும், (எ -று.)

(எ - டு.)  உண்டுவந்தான்,  உண்ணூஉ வந்தான், உண்குபு வந்தான்
எனவரும்.

செய்தெனெச்சத்தின்     குறிப்பாகிய  இன்றி,  அன்றி  யென்பனவும்
‘தம்மின்  றமையா  நந்நயந்  தருளி’  (நற்-1)   எனவும்,  ‘தொல்லெழில்
வரைத்தன்றி  வயவுநோய்  நலிதலின்’   (கலி-19),  எனவும் வினைமுதல்
வினையாய் முடிந்தவாறு கண்டுகொள்க.                      (32)

செய்து, செய்யூ, செய்பு என்பனவற்றிற்கு முடிபு
 

233. அம்முக் கிளவியும் சினைவினை தோன்றின்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோ ரனைய என்மனார் புலவர்.
 

என்  -  எனின்,  இதுவும்  அம் மூன்றன் திறத்துப்படுவதோர் முடிபு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ -  ள்.)   அம்   மூன்று   சொல்லும்    சினைப்பொருளிடத்து
வினையெச்சமாய்த் தோன்றின் முன் கூறின விதிக்கேற்பச் சினை