சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

179

பொருட்பெயரும்,     வினைப்பொருட்பெயருமாகச்      சொல்லப்பட்ட
அவ்வறுவகைப்  பொருட்பெயர்க்கு  ஒரு    தன்மையான உரிமையினை
யுடைய செய்யும், செய்த என்னும் இருவகைப்பட்ட, சொல்லும், (எ - று.)

(எ - டு.) நிலம்: அவன்   உண்ணும்  இல்லம்,  அவள்  உண்ணும்
இல்லம்,  அவர்  உண்ணும் இல்லம், அது  உண்ணும்  இல்லம்,  அவை
உண்ணும் இல்லம் எனவரும்.

பொருள்: அவனுண்ணும்    சோறு,     அவளுண்ணும்     சோறு,
அவருண்ணும் சோறு, அது உண்ணும் சோறு, அவை  உண்ணும்  சோறு
எனவரும்.

காலம்:  அவனுண்ணுங்காலை,              அவளுண்ணுங்காலை,
அவருண்ணுங்காலை,   அதுவுண்ணுங்காலை,   அவை யுண்ணுங் காலை
எனவரும்.

கருவி: அவனெறியுங்  கல், அவளெறியுங்  கல்,  அவரெறியுங்  கல்,
அது எறியும் கல், அவையெறியுங் கல் எனவரும்.

வினைமுதல்: உண்ணுமவன், உண்ணுமவள்,  உண்ணுமவர்  உண்ணு,
மது, உண்ணுமவை எனவரும்.

வினை:  அவனுண்ணுமூண்,   அவளுண்ணுமூண்,  அவருண்ணுமூண்
அதுவுண்ணுமூண், அவையுண்ணுமூண் எனவரும்.

இனி,  செய்த  என்பதற்கும்  இவ்வாறே யான்  உண்ட  இல்லம்,  நீ
உண்ட   இல்லம்,  அவன்  உண்ட  இல்லம்   என்றாற்போல   மூன்று
இடத்திற்கும்   இவ்விடத்து    வாய்பாட்டு    விகற்பங்களும்   அறிந்து
ஒட்டிக்கொள்க.

ஈண்டுச்  செய்யும்  என்பது  முற்றும்  எச்சமும் என இருவீற்றதாகும்
சிறப்புடைமையின் முற்கூறப்பட்டது.

மற்றுச்    செய்யும் என்பது ‘பல்லோர் படர்க்கை’ என்புழிக் கூறிற்றா
கலின் ஈண்டுக் கூறவேண்டா எனின்,  ஆண்டு  முற்றாய  நிலைமைக்குக்
கூறியது;  ஈண்டு  அஃது   எச்சமாகிய  நிலைமைக்குக்  கூறியது  எனக்
கொள்க.  மற்று  அது   அவ்விருநிலைமையும்  பெயரொடு முடிய மேல்
அவ்வேறுபாடறியுமாறு  என்னை  எனின்,   முற்றாய்ப்  பெயர்கொண்ட
வழி    மற்றோர்   சொல்   நோக்காது    செப்பு    மூடியக்காற்போல்
அமைந்துமாறும்.   எச்சமாய்ப்   பெயர்   கொண்டக்கால்   அமையாது
மற்றுமோர் சொல் நோக்கிற்றுப் போல நிற்கும் என்பது.

இனி   முற்றாயவழி   உண்ணும்  என   ஊன்றினாற்போல  நலிந்து
சொல்லப்படும்   என்றும்,  எச்சமாயவழி   ஊன்றாது   நெகிழ   முடிபு
சொல்லப்படும் என்றுங் கொள்க.

அஃதேல்  “பல்லோர்  படர்க்கை”  என்புழிக்   கூறியது  முற்றிற்கு
என்றும்,  ஈண்டுக்  கூறியது எச்சத்திற்கு  என்றும்  பெறுமாறு  என்னை
எனின்,    ஈண்டுச்     செய்த     என்பதனோடு    படுத்து   முடிபு
கூறிமமையானும்,