ஆண்டு முற்றாயவழிக் கொள்ளாதனபற்றி விலக்கினமையானும் பெறுதும் என்பது. மற்று, இம் முற்று நிலைமையையும் எச்சநிலைமையையும் இரண்டிரண்டாகப் பகுத்தோதாதது என்னை எனின், பொருள் வேற்றுமை யல்லது வாய்பாட்டு வேற்றுமையின்மையின் கூறாராயினார் என்பது. இவ் வறுவகைப் பெயருள்ளும் வினைமுதற்பெயரொழித்து ஒழிந் தவற்றிற்கெல்லாம் வினை முதற்பெயர் முன்வந்தல்லது பொருள்முற்றாது என்பதூஉம், வினைமுதற்பெயர் வருவழிப் பின்னின்ற எச்சத்தோடு எழு வாயாய், இயைகின்றதோ, பிறவேற்றுமையா யியைகின்றதோ என்னும் விகற்பமும், ஈண்டு வினைமுதற்பெயரேயன்றிப் பிறபெயரோடு முடிபாதற்குக் காரணம் ‘வினையே செய்வது’ என வினையிலக்கணம் கூறியவழி வினைச்சொற் குறிப்பாய்ப் பிற பெயரும் புக்கமையாது என்பதூஉம், அவ்வெட்டனுள் கடைக்கண் இரண்டும் ஒழிய மற்றை ஆறும் ஈண் டோதப்பட்டன என்பதூஉம் அறிந்து கொள்க. யான் ஆடை ஒலிக்கும் இல்லம், ஆடை ஒலித்த கூலி என்றாற்போல் வன முடியுமாறு என்னை எனின், அவ்வினையிலக்கணத்துள் இன்னதற்கு இது பயன் என்னும் அவ்விரண்டெனப் பெயர் வகையாகலின் தன்னின முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும் என்பது. “மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்டொடீ” எனவும், “நின் முகங் காணு மருந்தினேன் என்னுமால்” (கலித்.60) எனவும் வருவன வாமாறு என்னை எனின், தீரும் மருந்து என்பது தீர்தற்குக் காரணமாகிய மருந்து என்றவாறு. காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த மருந்தாதற்றன்மைய என்றவாறு. இவ்வாறு காரணப்பெயரும் காரியப் பெயருமாய் வருவன அவ்விலக்கணம் எட்டனுள்ளும் அடங்காமையின் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். யான் செல்லும் ஊர், யான் போந்த ஊர் என்பன நிலப்பெயருள் அடங்கும். ‘ஊர்களிறு மிதித்த நீர்’ எனவும், ‘நூலாக் கலிங்கம்’ எனவும், ‘எள்ளாட்டின எண்ணெய்’ எனவும், உண்ட எச்சில் எனவும் வருவன செயப் படுபொருளின் விகற்பமாக்கி அதனுள் அடக்கிக்கொள்க. இவ்வாறு வரும் பிறபெயர் விகற்பங்களும் அறிந்து அட்க்கிக் கொள்க. அவையாவன தேரோடும் புறம், ‘குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி’ (திருமுரு:199) என்றாற்போல்வன. இனிச் செய்யும் என்பது செய்யா நிற்கும் எனவும், செய்த என்பது செய்யாநின்ற எனவும் வரும் வாய்பாட்டு வேற்றுமையும் தன்னினமுடித்தல் என்பதனாற்கொள்க. |