சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

36

வெனின்,  அல்லதென்பது     அஃறிணை     யொருமைப்பாற்குரியதே
எனினும்     மற்றை     நான்கு     பாற்கண்ணும்    பால்வழுவாயுந்
திணைவழுவாயுஞ்   சென்று  மயங்கல்   கண்டு,   அதனைக்  காத்தற்
பொருட்டாகச் சொல்லினார் என்பது.

(எ - டு.)  அவனல்லது,  அவளல்லது,   அவரல்லது,  அதுவல்லது,
அவையல்லது எனவரும்.

அவனல்லது  என்புழி  அல்லது  என்பதனைப்  பின் பிறன் இல்லை
என்று வருவதனோடுபடுத்து வழுவாதல் அறிக.

அப்பொருளல்லா என்பது  மிகை;  அதனாற்  பிறிது பொருள் கூறும்
வழியும் அவன் வினாயதற்கு இனமாயவற்றையே கூறுக என்றவாறு.

இதனாற்  சொல்லியது   செப்பின்கண்   பிறப்பதோர்   வழுக்கண்டு
அதனை  அமைத்தற்குக்  கூறியவாறாயிற்று.   இதனுள்    வழுவென்பது
என்னை   யெனின்,   அவன்   வினாயதனை   மறுப்பதன்றி,   அவன்
வினவாத   பிறிதொன்றனையும்   உடம்பட்டுக்  கூறினமையின் என்பது.
வழுவமைதியேற்    பிறிதுபொருள்     கூறுக    என   விதிக்கற்பாற்று
அன்றெனின்   அவ்வாறு  கூறலாகாதென  மறுத்து   இவ்வாறு   கூறுக
எனப்தோர் விதி நீர்மைத்தது என்பது.                        (35)

மேலதற்கோர் புறனடை
 

36.

அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்.
 

என் -  எனின்  இதுவும் மேலதற்கோர் புறனடையாயதோர் இறுத்தல்
வகைமை கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.)  அவன்  வினாவின  பொருடன்னைச் சொல்லு மிடத்துச்
சுட்டி இல்லையென்று சொல்லுக (எ - று.)

(எ - டு.) இப்பயறு அல்லது இல்லை, இவையல்லது பயறு இல்லை.
 
                                                       (36)

இதுவுமது
 

37.

பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள் வேறுபடாஅ தொன்றா கும்மே.

 

என் -  எனின்  இஃது  ஒருபொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல்
நுதலிற்று.  மேல்  இவையல்லது  பயறு   இல்லை  என்பதனைப்பற்றிப்
பிறத்தலான் மேலதற்கே புறனடை யெனினும் அமையும்.

(இ - ள்.)   பொருளோடு     பொருந்தாச்    சுட்டுப்பெயராயினும்
பொருள்வேறுபடாது; ஒரு பொருளேயாகும், (எ - று.)

(எ - டு.) இவையல்லது பயறு இல்லை எனவரும்.