சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

43

(எ - டு.) யாழுங் குழலும்  பறையும்    இயம்பினார்  எனவரும்.

இதனாற்   சொல்லியது அப் பொதுச் சொற்களைப் பிரித்தெண்ணும்
வழியும்    வினை    முடிபின்    மரபு     வழுவாமற்    சொல்லுக
என்பதாயிற்று.                                          (47)

இரட்டைக்கிளவி
 
  

48.

1இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா.
 

என் - எனின் உரிச்சொற்கண் மரபு வழுக்காத்தல்  நுதலிற்று.

(இ - ள்.) இரட்டித்துச் சொல்லப்படுஞ் சொற்கள்  அவ்விரட் டித்துச்
சொல்லுதலிற் பிரித்துச் சொல்லப்படா, (எ - று.)

அது இசை, குறிப்பு, பண்பென மூன்று வகைப்படும்.

(எ - டு.) சுருசுருத்தது,  மொடு மொடுத்தது  என இவை இசை பற்றி
வந்தன. கொறு  கொறுத்தன,   மொறு மொறுத்தார்  என்பன  குறிப்புப்
பற்றி    வந்தன.   குறுகுறுத்தார்,   கறுகறுத்தார்    என்பன   பண்பு
பற்றிவந்தன.

இதனாற்    சொல்லியது, ஒரு பொருட்கண் இரு சொல்லினை ஒரு
பொருள்  வேறுபாடு  குறியாது  கூறின்  மரபல்ல எனினும், அவ்வாறு
இரட்டிக்  கூறலே அவற்றிக்கு அடிப்பாடாகலின், இனி, அதனை  மரபு
வழுவற்க   என   மரபு  கூறியவாறாயிற்று.  இது  மரபு  வழுவமைதி
போலும்.                                               (48)

ஒருபெயர்ப் பொதுச்சொல்லைச் சொல்லும் முறைமை
 

49.

ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
2உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்.
 

என் -  எனின்  ஒருபெயர்ப் பொதுச் சொற்கண் மரபுவழுக் காத்தல்
நுதலிற்று.

(இ - ள்.)ஒரு  பெயர்ப்பட நின்ற  பொதுச் சொல்லை ஆண்டுள்ள
பொருள்   ஒழிய   உயர்திணைக்கண்ணுந்  தெரிந்துகொண்டு  வேறே
கிளத்தற்குக்  காரணம்  அப்பொருட்கண்  தலைமையும் பன்மையுமாம்
என்றவாறு.


1 இரட்டுப்  பிரிந்திசையா    என்பது    இளம்பூரணர்   பாடம்.

2 இவ்வரியை  அடுத்த  நூற்பாவின் முதல்  வரியாகச்  சேர்த்துக்
கொள்வர் தெய்வச் சிலையார்.