‘வடுகரருவாளர்’என்பதூஉம் சான்றோர்செய்யுள் அன்றாலெனின், 1‘கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவு, நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன் மறவரும் என, நான்குடன் மாண்டதாயினும்’ என்பதும் உண்மையின் அமையும் என்பது. அஃதே ‘திங்களுஞ் சான்றோரு மொப்பர்’ (நாலடி-) எனவும். “வேந்தன் பெரும்பதி மண்ணாண் மாந்தர் ஈங்கிம்மூவர் இதற்குரியாரே” எனவுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் வருமாலெனின் திங்களும், பதியும் என்பன அஃறிணை முடிபினவெனினும் தாம் உயர்திணைப் பொருளவாகலின். அவை இந்நிகரனவல்ல. இவற்றின்கட் சிறுபான்மை வழுவினையும் இப்பலவயினானும் என்றதனாதல் அதிகாரப் புறனடையானாதல் அமைத்தும் என்பது. இதனாற் சொல்லியது செய்யுட்கண் திணைவிரவி எண்ணியவழிப் பொதுவாக முடியாது ஒரு திணையான் முடிவது கண்டு அதனை அமைத்தவாறு. இனிப் பொது முடிபிலவென்று அஃறிணை முடிபிற்றாதற்குக் காரணம் என்னோவெனின் அவ்வாறெண்ணிய உயர்திணையும் பொருளென்னும் பொதுமையான் அஃறிணையின் அடங்கும். உயர்திணையுள் அஃறிணை அடங்காது என்பது போலும். (51) பலபொருள் ஒருசொல் இருவகை எனல் |