சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

64

ரும்   என இருவகைப்படும். அவற்றுள் தொழிலின்மேல் நின்றனவும்
காலந்  தோன்றா;  அவை  உணல்,  தின்றல் எனப் பொருளது புடை
பெயர்ச்சியை  அறிவித்து நிற்கும் என்பது. இவற்றுள் பூசை, வேட்டை
என்றாற்போல்வன  வினைச்சொற்கு  அடியாய்ப்  புடை பெயர்ச்சியை
விளக்காது பெயர்ப் பெயரேபோல் நிற்பனவும் உள என்பது.

இனிப்     பொருண்மேல் நின்றனவும், வினைமுதற் பொருண்மேல்
நிற்பனவும் செயப்படுபொருண்மேல் நிற்பனவும் என  இருவகைப்படும்.
அவ்விருவகையும்  காலந்தோன்றி  நிற்கும்  என்றவாறு. அவைதாமும்
ஓசை   வேற்றுமையான்  ஒருவழி  வினை  எனப்பட்டு   நிற்பனவும்,
வினையாகாது பெயரேயாய் நிற்பனவும் என இருவகைப்படும்.

(எ - டு.) உண்டான்,   தின்றான்,    உண்டது,   தின்றது  எனப்
படுத்தலோசையான்  வினையெனப்பட்டுக்  காலந்  தோன்றி  நின்றன.
உண்டவன்,     தின்றவன்,     உண்ணுமது     என்பன     ஓசை
வேற்றுமையானன்றித் தானே பெயராய்க் காலங்காட்டி நின்றன. இவை
வினைமுதற்கண் பாகுபாடு.

1‘‘கொலைவர் கொடுமரந் தேய்த்தார்” “அவன் ஏறிற்று இக்குதிரை”
என்றாற்   போல்வன  வினைப்பெயரே.  அச்செயப்படுபொருட்  கண்
காலங்   காட்டி  நின்றன.  யான்  சொன்னவன்,   2‘உண்பவை  நாழி
உடுப்பவை  இரண்டு’  என்றாற்  போல்வன தாமே செயப்படுபொருண்
மேற்  பெயராய்க்  காலந்தோன்றி  நின்றன. இவை செயப்படுபொருட்
பாகுபாடு.

நிலமும் காலமும் கருவியும் பற்றிவரும் தொழிற் பெயர் விகற்பமுங்
கொள்க.

(எ - டு.)  ...  ...  உண்டது    என்பது  இத்தொழிற் பெயர்களின்
காலவிகற்பம் என அறிக.

பெயர்ப்பெயர் காலந்தோன்றா என்பதற்கு விதி யாதோ எனின் இச்
சூத்திரத்தான் எய்தவும் பெறும் என்பது.                      (9)

இரண்டாம் வேற்றுமை
 

72.

3இரண்டாகுவதே,
ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்
பவ்விரு முதலின் தோன்றும் அதுவே.
 

கலி 12 : 1-2  புறம் 189 : 5

3 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக்
கொள்வர், இளம் பூரணர். இவ்வுரையாசிரியர் இவ்விருநூற்பாக்களுக்கும்
உரையியைபு நோக்கி ஒன்றாகவே பொருளுரைத்துள்ளார்.  இங்ஙனமே
ஏழாம்வேற்றுமைகாறும் இவ்வுரை செல்லும்.