சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

68

இனிச் செய்வானும்  செயப்படு  பொருளும்  என்னும்   இரண்டும்
ஒன்றேயாயும் வரும்.

(எ - டு.)சாத்தன் தன்னைக் குத்தினான் எனவரும்.

இனிச்     செயப்படுபொருட்கேதுவாயதூஉம் செயப்படுபொருளாய்
வரும். அவை கற்கப்படும் ஆசிரியர், கற்கப்படா ஆசிரியர் எனவரும்.

மற்றும்இதன் கருத்து விகற்பம் உரையிற்கொள்க.          (10.11)

மூன்றாம் வேற்றுமை
 

74.

1மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே.
 

அதற்குரிய பொருண்மை
 
   

75.

அதனின் இயறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னான் ஏது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

 

என்  - எனின்,    மேல்   நிறுத்த    முறையானே    மூன்றாம்
வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மூன்றாமெண்ணுமுறைக்  கண்ணதாகிய  ஒடு என்னும்
பெயரையுடைய    வேற்றுமைச்   சொல்  வினைமுதல்  கருவியாகிய
காரணங்களை    உடைத்து.    அஃது    வருமாற்றைச்   சொல்லின்
ஒன்றனாலொன்று   பண்ணப்படும்  பொருண்மை,  ஒன்றனாலொன்று
நகுதல்   என்னும்   பொருண்மை,  ஒன்றனாலொன்று  தொழிலுறுதல்
என்னும்    பொருண்மை,    ஒன்றனாலொன்று   ஆதல்   என்னும்
பொருண்மை,  ஒன்றனாலொன்றைக்  கோடல்  என்னும் பொருண்மை,
ஒன்றனோடொன்று மயங்கல் என்னும் பொருண்மை,


1 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக்
கொள்வர் இளம் பூரணர்.