சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

80

யெனின்,     அகம்   புறம்   என்பன   ஓரிடத்தினை  வரையறுத்து
உணர்த்தும்  வழி  ஆறாவதாம்;  அவ்வாறன்றிக் கண் என்பது போல
இடம்  என முழுதுணர்வு செல்லநின்றவழி  ஏழாவதாம் எனக் கொள்க.
இதுநோக்கிப்   போலும்   கண்   கால்   எனக்   கண்  என்பதனை
இருகாலாவது கூறியது என்பது.

இவ்வாறன்றிக்   கண் என்பது ஓரிடத்தினை வரையறாது முழுவதும்
உணரநிற்கும்    உருபு    எனவும்,    அல்லது   ஓரிடப்   பொருள்
உணர்த்திநிற்கும் உருபு எனவும் கூறுவதோர் நயமுண்டுபோலும். (20,21)

ஆறுருபிற்கும் பொதுவிலக்கணம்
 

84.

வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின் றியலும் தொகைவயிற் பிரிந்தே.
1

 

என் -  எனின், ஐ முதலிய ஆறுருபிற்கும் பொதுவாய இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வேற்றுமைச்           சொல்லினது       பொருளை
விரித்துணர்த்துங்காலத்து,  அவ்வேற்றுமைப்   பொருள்கள்   பெயரது
ஈற்றின் கண்ணே நின்று நடக்கும், தொக்க விடத்து நின்று, (எ - று.)

(எ - டு.) மரம் குறைத்தான் என்பது மரத்தைக் குறைத்தான்  என
இறுதிக்கண்  விரிந்து  நின்றது.  தாய்  மூவர் என்பது தாயோடு மூவர்
என விரிந்தது. பிறவும் அன்ன.

இது     “கூறிய முறையின்” 2 என்றதனால் அடங்காதோ  எனின்
அஃது   உருபுநிற்கும்   இடம்   கூறியது;  அங்ஙனம்  நின்ற  உருபு
விகாரப்பட்டு, தொக்குநின்று பின் விரியும் வழியும் பிறாண்டு  விரியாது
முன் கூறிய அதனையே திரிபுபடுவழிக் கூறியது எனக்கொள்க.    (22)

உருபு நோக்கிவரும் சொற்களின் இலக்கணம்
 

85.
 

பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய என்ப.
 

என்  -  எனின், உருபு  நோக்கிவரும்  சொற்களின்  இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.


1 இதனையும்     அடுத்த   நூற்பாவையும்  ஒன்றாகக்   கூறுவர்
சேனாவரையரும்     நச்சினார்க்கினியரும்      தெய்வச்சிலையாரும்.
இளம்பூரணர் இவர் கொண்டவாறே கொள்வார். 2 தொல்-சொல் - 70.