சொல்லதிகாரம் - இடையியல்94

முத்து. ஒ. 12.

மன்றக் கிளவி தெளிவை விளக்கும்.

இளம்

வ-று : 1 ‘கார் மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர்
தேர் மன்றத் தோன்றிய’
என்றக்கால், தெளிந்தாள் அவள் என்றவாறு.

சேனா.

இ-ள் : மன்ற   என்னுஞ்    சொல்    தெளிவுப்பொருண்மையை
யுணர்த்தும், எ-று.

உ-ம் :2 ’கடவு  ளாயினு  மாக,  மடவை  மன்ற வாழிய முருகே’
(நற்.34) என வரும். மடவையே என்றவாறாம்.

தெய்.

இதுவுமது

இ-ள் : மன்ற    என்னுஞ்   சொல்   தேற்றப்   பொருண்மையை
யுணர்த்தும் என்றவாறு.

‘கடவுளாயினுமாக, மடவை மன்ற  வாழிய  முருகே’  என்ற  வழிக்
கடவுளாயினும் மடவை எனத் தேற்றப் பொருண்மை காட்டிற்று.

நச்.

இதுவுமது.

இ-ள் : மன்ற என்கிளவி தேற்றம்  செய்யும்-மன்ற  என்னுஞ் சொல
தெளிவுப் பொருண்மை யுணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மடவை மன்ற  வாழிய  முருகே’  (நற்.  34)  என  மன்ற
அறியாமையையே தெளிவித்தது.


1. பொருள் : கார்காலமே என  உறுதியாகத்    தெளிந்தவளின்
     கண்ணுள்ளே காதலரின் தேர் தெளிவாகத் தோன்றிய............

2. பொருள் :  முருகனே!  நீ  கடவுளாக  இருப்பினும்   இருக்க,
      உறுதியாக நீ ஒன்றும் அறியாதவனேயாவாய்.