சொல்லதிகாரம் - இடையியல்96

உ-ம் : ‘முரசுகெழுதாயத்தரசோ தஞ்சம்’ (புறம். 73) என்பது எளிது
என்பது குறித்து நின்றது.

நச்.

இதுவுமது

இ-ள் : தஞ்சக்கிளவி   எண்மைப்    பொருட்டே   -   தஞ்சம்
என்னுஞ்சொல் எளிது என்னும் பொருண்மையை யுடைத்து, எ-று.

உ-ம் ; ‘முரசு கெழுதாயத்து  அரசோ  தஞ்சம்’ எனத் தஞ்சம்
அரசு கொடுத்தல் எளிது என நின்றது.

இசரயேல்

இச் சொல் பெயர்ச்  சொல்லாக  அடைக்கலப்  பொருளிலும்  சங்க
இலக்கியத்தில் வந்துளது.

தஞ்சம் அருளாய் நீயே (ஐங். 50) - அடைக்கலம்

பால.

கருத்து : தஞ்சம்   என்னும்   இடைச்சொல்லின்   பொருண்மை
கூறுகின்றது.

பொருள் : தஞ்சம்  என்னும்  இடைச்சொல்  எண்மைப்  பொருள்
குறித்து வரும்.

எ,டு : ஈயென இரக்குவராயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்      (புறம் - 73)  

அரசைப் பெறுவது எளிது என்பது பொருள்.

அடைக்கலம்  என்னும்    பொருள்தரும்    ‘தஞ்சம்’    என்னும்
பெயர்ச்சொல் வேறு, இவ்இடைச்சொல் வேறு.

தஞ்சு     என்பது   இதன் முதனிலை. தஞ்சாவூர் (தஞ்சு ஆவூர்-
தஞ்சாவூர்)  என்பது  இதனடியாகப் பிறந்த பெயராம். வளங்காரணமாக
வாழ்தற்கு எண்மையான ஊர் என்பது கருத்து.

தன்     செய்யூர்  என்பது  தஞ்சாவூரென மருவிற்றென்பார் சிலர்.
தன்செய்யூர்   என்பது    மருவின்   தஞ்சையூர்  -  தஞ்சியூர்  என
மருவுதலன்றி    (ஆவூர்)     தஞ்சாவூர்   என   மருவுதல்   மொழி
மரபாகாமையறிக.