சொல்லதிகாரம் - இடையியல்98

சேனா.

இ-ள் : அந்தில் என்னுஞ் சொல்,  அங்கென்னும்  இடப்  பொருள்
உணர்த்துவதும் அசைநிலையும் என இரண்டாம், எ-று.

உ-ம் : ‘வருமே சேயிழை யந்திற்  கொழுநற்  காணிய’ (குறுந். 293)
என்புழி ‘ஆங்கு வரும்’ என்றவாறாம்.

‘அந்திற் கச்சினன்   கழலினன்’   (அகம்.   76)   என  வாளாதே
அசைத்து நின்றது.

தெய்.

இதுவுமது.

இ-ள் : அந்தில் என்பது ஆங்கு  என்னும்  பொருண்மை பெற்றும்
அசைநிலையாகியும் வரும், எ-று.

உ-ம் : ‘வருமே சேயிழை யந்திற்  கொழுநற்  காணிய’ (குறுந். 293)
என்பது ஆங்கு என்னும் பொருளுணர்த்திற்று.

‘அந்திற்  கச்சினன்  கழலினன்’ (அகம்.  76)  என்புழி அசை நிலை
யாயிற்று.

நச்.

இது, பொருள்படுமாறும் அசைநிலையும் கூறுகின்றது.

இ-ள் : அந்தில்  ஆங்கு அசைநிலைக்  கிளவி என்று ஆ இரண்டு
ஆகும்   இயற்கைத்து  என்ப  -  அந்தில்   என்னுஞ்  சொல் ஆங்க
என்னும்   இடப்பொருள்  உணர்த்துதலும்  அசைநிலைச் சொல்லாதலும்
என்னும் அவ்விரண்டு கூறாம்  இயற்கையை  யுடைத்து என்று கூறுவார்
புலவர். எ-று.

உ-ம் : ‘வருமே சேயிழை  யந்தில்,’ ‘அந்தில்  கச்சினன் கழலினன்’
என இடமும் அசைநிலையுமாய் நின்றது.

ஆதி.

1உ-ம் : இடருற வருவன்  இறைவன்  அந்தில்  -  அந்நேரத்தில்
ஆங்கு அரம்பை யந்தில் அழகுடையாள் - அசை


1. இது வலிந்து தந்த உதாரணம்.   செய்யுளிற்  காட்டலே  நன்று.
வழக்கில் அந்தில் ஆட்சியில்லை.