உ-ம் : 1 சென்றே யெறிப ஒருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை-நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெ ழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து (நாலடி.24) இதனுள் ‘நன்றே காண்’ என்பது ‘தீதேகாண்’ என்னுங் குறிப்புணர்த்திற்று. ‘நின்னையன்றே திருமுக்குடையாய்’ என்றவழி ‘அன்றே’ என்பது அல்லாமையைக் குறியாது முக்குடையானையே சுட்டிநின்று அவன்கேட்பது பயனாக வந்தது. 2 பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமில் அறிவி னவர் (நாலடி.192) என்பதனுள் ‘அன்னோ’ என்பது அருள் குறித்து நின்றது. ‘வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப-அந்தோ அளியென வந்தனென் என்ற’ என்றவழி, அந்தோ என்பது கேடு குறித்து நின்றது. அன்னபிறவு மாவன வந்தவழிக் கண்டு கொள்க. நச். இதுவுமது. இ-ள் : நன்று ஈற்று ஏயும்-நன்றினது ஈற்றின்கண் வந்த ஏயும், அன்று ஈற்று ஏயும்-அன்றினது ஈற்றின்கண்வந்த ஏயும், அந்து ஈற்று ஓவும்-அந்தினது ஈற்றின்கண் வந்த ஓவும், அன்
1. பொருள் :பிணப்பறை யறைபவர் ஒருகால் நீண்ட நேரம் அறைவர்; பின் சிறுபொழுது தாழ்த்து அறைவர்; இந்நிலையில் இனிச் சாவார் செத்தாரைச் சுமந்து வரப் பிணத்துக்குரியார் அதனை எரியூட்ட மூன்று கால்கொண்டு அமைத்த கொட்டிலில் தீயை மூட்டிப் புறப்படுவார்; யாக்கையின் நிலைமை நன்று! 2. பொருள்; பொன்னைக் கொடுத்தாலும் பெறுதற்கரிய பெரியவரை அவரடையும் பயன் இல்லாமலேயே ஓருவன் சேரப் பெற்றிருந்தும் அவரால் பயனடையாமல் வீணே பொழுதைக் கழிப்பர், நல்லறிவில்லாதவர். |