சொல்லதிகாரம் - இடையியல்189

பிற  எண்ணின்கண்  உருபு   தொகுதல்   வரையப்படும்  என்பது
அறிவித்தற்கு   இதனை    வேற்றுமையியல்களுட்   கூறாது  ஈண்டுக்
கூறினார் இடைச் சொல்லாதல் ஒற்றுமையான் என அறிக.

உம்-உந்தாதல்
 

287.

உம்முந்தாகு மிடனுமா ருண்டே                   (44)

(உம் உந்து ஆகும் இடனுமார் உண்டு ஏ)
 

ஆ.மொ

இல.

There are places where ‘um’ is changed into ‘unthu’

ஆல்.

There are places where the /um/becomes/untu/.

பி.இ.நூ.

நன். 341

....... செய்யுளுள் உம் உந்து ஆகலும்...உள.

இளம்.

வ-று :நீர்க் கோழி கூஉப் பெயர்க்குந்து’ (புறம்.395) என்பது.

1எட்டு  வகைப்பட்ட  உம்மையுள் ஓரும்மை  எனப்படாது  வினை
செய் மருங்கிற் கால மொடு வந்தது (இடை.2)

சேனா.

இ-ள்: வினை செய்  மருங்கிற்  காலமொடு வருவனவற்றுள் உம்மீறு
உந்தாய்த் திரிதலும் உடைத்து, எ-று


1. எட்டுவகை: எச்சம்,  சிறப்பு,  ஐயம்,  எதிர்மறை,  முற்று,  எண்,
தெரிநிலை,  ஆக்கம்  என்பன.  அப்பொருள்களுள்  ஒன்றெனப்படாது
இக்கூறிய உம்மை. இது வினைச் சொல் உருவாக்கத்தில்  வரும்  விகுதி
உம்மை  ஆகும்.  இதை   ஏற்புழிக்  கோடல்  என்பதனாற்  பெறுவர்
சேனாவரையர்.