ஆல். If others that are not mentioned here appear, their nature must be understood form what are mentioned here. பி.இ.நூ: இல,வி. 279 கிளந்த வல்ல அன்ன பிறவும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இவ்வோத்திற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உரை : இது மேற்சொல்லப்பட்டன அன்றி வரும் இடைச் சொல்லும் கொள்ளப்படும் எ-று. அவை; காரம், கரம், கான், ஆனம், ஏனம், ஓனம் எனவும்; மாள, மன், மார், ஆர், தெய்ய எனவும் வரும். புறனடை யென்பது நூலுள்ளே தொகாதனவற்றைப் பாதுகாத்து நூற்குமுற்றாகாமை உணர்தற் பொருட்டாக வைத்து உரைப்பது. ஏழாவது இடையியல் முற்றிற்று. சேனா. இ-ள் : மேற்சொல்லப்பட்டனவன்றி, அவைபோல்வன பிறவரினும், அவற்றைக் கிளந்த சொல்லின் இயல்பான் உணர்ந்து கொள்க, எ-று. கிளந்தவற்றியலான் என்றது, ஆசிரியர் ஆணையானன்றிக் கிளந்தவற்றையும் இன்னவென்றறிவது வழக்கினுட் சார்பும் இடமும் குறிப்பும் பற்றியன்றே? கிளவா தவற்றையும் அவ்வாறு சார்பும் இடமும் குறிப்பும் பற்றி இஃதசைநிலை, இஃதிசை நிறை, இது குறிப்பால் இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க என்றவாறு. உ-ம் ; ‘சிறிது தவிர்ந்தீக மாள நின் பரிசிலர் உய்ம்மார்’ எனவும் ‘சொல்லென்தெய்ய நின்னொடு பெயர்ந்தே’ எனவும், ‘அறிவார் யாரஃதிறுவுழி யிறுகென’ எனவும், ‘பணியுமாம் என்றும் பெருமை’ (குறள் 978) எனவும், ஈங்காயினவால் |