சொல்லதிகாரம் - இடையியல்215

சிவ.

அவனைத்  திருநெல்வேலியில்  வச்சு (வைத்து)க்   கண்டேன்-வச்சு
(வைத்து)  என்பது  அசை  நிலை.  திருநெல்வேலி,   மதுரை மாவட்ட
வழக்கு.

மருத்துவர்   வரக்கண்டி   நோய்   குணமாயிற்று-கண்டி   என்பது
அசைநிலை-வடார்க்காடு மாவட்ட வழக்கு.

‘நீ  வர  சொல்ல   அவனையும்   அழைத்துவா-சொல்ல  என்பது
பொழுது என்னும் பொருள் தருவது. வடார்க்காடு மாவட்ட வழக்கு.

‘வே  இங்கே   வாரும்’-வே,    ‘அம்ம   போலக்   கேட்பிக்கும்
சொல்-திருநெல்வேலி மாவட்ட வழக்கு.

பிள்ளைவாள், முதலியார்வாள்-‘வாள்’  உயர்வு   குறித்த   இடைச்
சொல்.   இது  ‘ஆள்’  என்பதன்  திரிபாகவும்  கொள்ளலாம்.  உலக
வழக்கில் வரும் பிற இடைச் சொற்களும் கொள்க.

இடையியல் உரைவளம் முற்றும்