சொல்லதிகாரம் - இடையியல்37

7) ஒப்பில் வழியாற் பொருள் செய்குந:-

எ.டு : -    எரியகைந்தன்ன    தாமரை    -     யாழ்கெழுமணி
மாடற்றந்தணன் -

“குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்”

“வின் பொருபுகழ் விறல் வஞ்சி, மகன்றாயாதல் புரைவதாலெனவே”
என     உவமச்சொல்     இடைச்சொல்லாக     வரும்.     பிறவும்
உவமவியலுரையுட்    கண்டு   கொள்க.  இதனைத்  தத்தங்  குறிப்பிற்
பொருள்     செய்குநவற்றின்     பின்   வைத்தமையான்   இவையும்
தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவாம்.

ஈண்டு   வகைப்படுத்த   ஏழுனுள்   முதல்நின்ற   மூன்றும்மேலே
உணர்த்தப்பட்டமையின்   முன்வைக்கப்  பெற்றன.  ஒப்பில்  வழியாற்
பொருள்   செய்வன   இனி   உவமவியலுள்  உணர்த்தப்படுதலின்பின்
வைக்கப்பட்டது.   ஏனைய  மூன்றும் இவ்வியலுள் உணர்த்தப்படுதலின்
இடையே வைக்கப்பட்டன.

இடைச்சொல் நிற்கும் இடம்
 

246.

அவைதா
முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந்
தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலு
மன்னவை யெல்லா முரிய வென்ப.                 (3)

(அவைதாம்:
முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும்
அன்னவை எல்லாம் உரிய என்ப.)
 

ஆ. மொ:

இல.

The scholars say that their appearance either before or
after  words,   the   change  in  their  endings  and  the
appearance of one  before another, are permissible.

ஆல்

It is said that it may appear in all these ways following or
preceding  words,  deforming  its  endings and taking with it
another of its kind.

பி.இ. நூ.

நன். 420.

பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும்வந்து ஒன்றுவது இடைச்சொல்.