சொல்லதிகாரம் - இடையியல்38

இல. வி. 251.

பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்.

இளம்.

வ. று : பெயரை முன்னும் பின்னும் அடுத்து வருவன:
‘அதுமன்’, கொன்னூர் (குறுந். 138) என்பன.
வினையை முன்னும் பின்னும் அடுக்குமாறு:
வருகதில் லம்மவெஞ் சேரி சேர
ஓதந்தார், ஓ கொண்டார்.
என்பன.
தம்மீறு திரிந்தவை:
கொன்னை, மன்னை (இடை. 4) (இடை.6) என்பன
பிறிதவண் நிலையிற்று:
2மகவினை என்பது.

சேனா.

இ-ள் : மேற் சொல்லப்பட்ட இடைச்சொல், இடை வருதலேயன்றித்,
தம்மாற்  சாரப்படும்  சொற்கு  முன்னும்  பின்னும்  வருதலும், தம்மீறு
வேறுபட்டு  வருதலும்,  பிறிதோர்   இடைச்சொல் ஓரிடைச் சொல்முன்
வருதலுமாகிய அத்தன்மையவெல்லாம் உரிய, எ-று.

உ-ம் :  ‘அதுமன்’  (புறம் 147)  எனவும்,  கேண்மியா  (புறம். 148)
எனவும்  சாரப்படு  மொழியை  முன்னடுத்து   வந்தன.  3 கொன்னூர்
(குறுந்.  138)  எனவும்,  ‘ஓஒவினிதே’ (குறள் 1176) எனவும் பின்னடுத்து
வந்தன.  ‘உடனுயிர்  போகுக  4 தில்ல’  (குறுந். 57) என ஈறு திரிந்து
வந்தது.  5 வருகதில்   லம்ம  வெஞ்  சேரி சேர (அகம் 276) என்பது
பிறிதவணின்றது.


1. முன்பின் என்பன இடமுன் இடப்பின் ஆகும்.

2. மகவினை   என்பதில்   இன்   சாரியை   யிடைச்சொல்லுடன்
இரண்டன்    உருபாகிய  ஐ   இடைச்  சொல்லும் இருத்தலின்
பிறிதவண்    நிலையலுக்கு   உதாரணம்   ஆம்.    இதனினும்
‘வருகதில்லம்ம’   எனச்   சேனாவரையர்  காட்டிய  உதாரணம்
சிறக்கும்.

3. கொன்     - அச்சம்

4. தில் என்பது தில்ல என ஈறு திரிந்தது.

5. தில் என்பதுடன்  அம்ம   என்று  பிறிதும் ஓர்  இடைச்சொல்
அங்கு நின்றது.