எ - டு : | உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை |
| பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால் |
| தண்பெரும் பந்தல் தருமணல் ஞெமிரி. |
| மனைவிளக் குறுத்து மாலை தொடரி |
| கனையிருள் அகன்ற கவின்பெறு காலை |
| கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் |
| கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென |
| உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் |
| பொதுச்செய் கம்பலை முதுசெம் பெண்டிர் |
| முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர |
| புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று |
| வாலிலை மகளிர் நால்வர் கூடி |
| கற்பினின் வழாஅ நற்பல உதவிப் |
| பெற்றோற் பெட்கும் பிணையை யாகென |
| நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி |
| பல்லிருங் கூந்தல் நெல்லொடு தயங்க |
| வதுவை நன்மணங் கழிந்த பின்றை |
| கல்லென் சும்மையர் ஞெரேர் எனப்புகுந்து |
| பேரிற் கிழத்தி ஆகெனத் தமர்தர |
| ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் |
| கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து |
| ஒடுங்கினள் இடந்த ஓர்புறந் தழீஇ |
| முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப |
| அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின் |
| நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரைஎன |
| இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின் |
| செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர |
| அகமலி உவகைய ளாகி முகனிகுத்து |
| ஒய்யென இறைஞ்சி யோளே மாவின் |
| மடங்கொள் மதைஇய நோக்கின் |
| ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே |
(அகம்-86) |
இஃது உள்ளப்புணர்ச்சியான் நிகழ்ந்த களவின்பின் கரணமொடு நிகழ்ந்த வரைவின்பின் பள்ளி யிடத்து நிகழ்ந்ததனைப் பின்னொரு காலத்துத் தலைவி ஊடியஞான்று தோழியை வாயில் வேண்டிய தலைவன் கூற்று. இதன்கண் அவர்தம் குலமரபிற்கேற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுக்கப் பெற்றவாறும் கண்டு கொள்க. |