விளக்கம் : முன் என்பது இலக்கண நெறியின் வலப் பக்கத்தைக் குறிக்கும். ஏன்? நாம் இடமிருந்து வலம் நோக்கி எழுதுகிறோம். ஆதலின் முன்னோக்கிச் செலும் வலம் ‘முன்’ எனவும், தொடக்கமாகிய இடம் ‘பின்’ எனவும் கூறப்படும். அதுதான் - தான் அடித்தான் பார் - பார் | = | முன் உற்றது |
1 அம்சிறைத்தும்பி - அம் ஆ ஆ! அப்படியா - ஆ ஆ | = | பின் உற்றது. |
சொல்வதை உடனே செய்க - உடன் ஈறு திரிந்தது. 2 காண்டற்கு - அல் ஈறு திரிந்து ‘அற்’ ஆயிற்று. மரத்தின் மேல - அத்து இன் மேல் 3 ஊர்ப்புறத்தில் - புறம் அத்து இல் | = | இடைச்சொல் மேல் இடைச்சொல். |
மன், கொன், உம் - இவைஈறுதிரிந்து மன்னை, கொன்னை, உம்மை என வழங்கப் பெறும். பால. கருத்து : இடைச்சொற்கள் பெயர் வினைகளை யடுத்து வரும் முறைமையும் பிற இயல்புகளும் ஆமாறு கூறுகின்றது. எ-டு ; - பண்டுகாடுமன் - கேண்மியா: இவை முன்னடுத்து நின்றன. கொன்னூர் - ஒஓ இனிதே: இவை பின்னடுத்தன. உடனுயிர் போகுகதில்ல - தில் என்பது ஈறுதிரிந்து வந்தது. வருகதில்லம எம் சேரிசேர - பிறிதவண் வந்து இணைந்து நின்றது. “அன்னவையெல்லாம்” என்றதனான், மன்னைச் சொல்தில்லைச் சொல் எனத்தம்மை உணரநின்ற வழியும் ஈறுதிரிதலும், னகாரை என எழுத்துச் சாரியை ஈறுதிரிதலும்
1. அம்சிறைத்தும்பி என்பதில் அம் அழகு என்னும் பொருள்படுவதோர் இடைச்சொல். 2. காண்டற்கு - இதில் அல் இல்லை; தல் என்பது தொழிற்பெயர் விகுதி. லகரம் றகரமாகத் திரிந்தது இவ்வுருவு நோக்கியாதலின் ஈறு திரிதற்கு இவ் வுதாரணம் சிறவாது. மன் - மன்னை, தில்-தில்ல என்பன போல்வனவே சிறக்கும். 3. ஊர்ப்புறத்தில் - புறத்து, இல் என்பன இரண்டும் ஏழன் உருபின் பொருள்பட வந்த இடைச்சொற்கள். |