சொல்லதிகாரம் - இடையியல்45

உ-ம் :  ‘சிறிய கட்  பெறினே  எமக்கீயு  மன்னே’ (புறம், 235) -
இது கழிவு.

‘பண்டுகாடுமன்’  -  இஃது  ஆக்கம்,  பண்டு  காடு  என்பதன்றோ
இன்று   நாடு  என்று  ஆக்கம்   உணர்த்துகின்றது   எனின்,  அதன்
பொருளை இதுவும் கூடி நின்று உணர்த்திற்று எனவுணர்க.

‘பண்டு   கூரியதோர்   வாள்மன்’ - இஃது  ஒழியிசை.   இன்றோர்
குறைபாடு  உடைத்தாயிற்று   என்றும் சொல் ஒழிந்தமை தோற்றுவித்து
நின்றமை காண்க.

வெள். . . .

கழிவு என்பது  பயனின்றிக்  கழிந்ததற்கு இரங்குதலாகும்.  ஆக்கம்
என்பது  முன்னை  நிலையினும்   மிக்குளதாதல்.  ஒழியிசை   என்பது
சொல்லொழிந்து நின்ற சொற்களின் பொருளைத்  தந்து நிற்றல்.

ஆதி.

மன் என்னும் இடைச்சொல்  கழிவு ஆக்கம் ஒழியிசைப் பொருளில்
வரும்.

1உ-ம் : அன்று  யாவரும்  வந்து அடிதொழ  வாழ்ந்தேன் மன் -
இன்று  அது இல்லை  என  இரங்கல் - வாழ்ந்தேனே?  எனப்பொருள்
கழிவு.

பண்டு பரிசிலர் மன் :  இன்று  புரவலர்  (பரிசில்   வாழ்க்கையர்
ஆக்கமுற்று இன்று பிறங்குகின்றார் எனப் பொருள்) - ஆக்கம்.

நல்ல ஒரு பாட்டுமன் -  பாட்டு  நல்லது.  பாடிய  இசை அதனைக்
கெடுத்தது என ஒழிந்த ஒரு பொருள் தந்தது- ஒழியிசை.

மன் இடத்தில்  ‘உம்ம்’  என்று அமைத்து ஏக்கம், வியப்பு, எள்ளல்
பொருள் தோன்றக் கூறிய கருத்தை நன்கு உணர்க.

இசரயேல்:

மன்  சங்க  இலக்கியத்தில் மிகுதி,  உறுதி ஆகிய  பொருள்களிலும்
வழங்குகின்றது.

பசந்தனள்மன் என் தோழி (குறுந். 303) - மிகுதி.
உறுவது ஒன்று உண்டுமன் (குறுந். 199 - உறுதி)
                             (இடையும் உரியும் - பக். 20)


1. காட்டப்பட்ட   உதாரணங்கள்   உலக   வழக்கில்  இல்லாதன.
செய்யுள் வழக்கே காட்டல் சிறந்தது.