சொல்லதிகாரம் - இடையியல்46

பால.

கருத்து :  இவ்வியலுள்   உணர்த்தப்படும்    மூவகை    இடைச்
சொற்களுள்      தத்தங்      குறிப்பிற்      பொருள்     செய்வன
பொருளுணர்த்துஞ்சிறப்பும்  அவற்றின்  பன்மையும்  நோக்கி அவற்றை
முதற்கண்  உணர்த்தத்  தொடங்கி  இச் சூத்திரத்தான்  ‘மன்’ என்னும்
இடைச்சொல்   பெற்று   வரும்   பொருட்   குறிப்பு   இவை  எனக்
கூறுகின்றார்.

பொருள் :  மன்  என்னும் இடைச்சொல் செயற்கழிவும் ஆக்கமும்,
எச்சமாக   ஒழிந்து   நிற்கும்  பொருண்மையும்  என்று சொல்லப்பட்ட
அம்மூன்று பொருட் கூறுபாட்டினை உடையதென்று கூறுவர் புலவர்.

எ-டு :  “சிறிய  கட்  பெறினே  எமக்கீயு  மன்னே”  இது கழிந்த
பொருள் சுட்டிநின்றது. ‘பண்டுகாடுமன்’ (இப்பொழுது வயலாயிற்று) இது
ஆக்கம்   குறித்து   நின்றது.   கூரியதோர்   வாள்மன் (இப்பொழுது
திட்பமின்று) இது ஒழிந்த சொற் பொருண்மை சுட்டி நின்றது.

தில்
 

248.

விழைவே கால மொழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.               (5)

(விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று
அ மூன்று என்ப தில்லைச் சொல் ஏ)
 

ஆ. மொ.

இல.

The  morpheme ‘thil’  denotes  three  senses  which  are
desire, time and suggestion (inference)

ஆல்.

The morphem  /til/   appears   to   introduce  the  three
expressions of a great desire, of time and implied meaning.

பி. இ. நூ:

நேமி. சொ. 52

. . . . . . தில்லை பருவம் விழைவு
நயனில ஒழியிசையும் நாட்டு.

நன். 431

விழைவே காலம் ஒழியிசை தில்லே

இல.வி. 264. “  “  “

முத்து. ஒ. 3.  “ “ “