சொல்லதிகாரம் - இடையியல்49

“வருகதில் லம்மவெஞ் சேரி சேர”   (அகம். 276) என வந்தக் கால்
இன்னது செய்வல் என ஒழியிசை குறித்தது.

கல்.

என் - எனின், இதுவுமது.

இ-ள் : விழைவின்  கண்ணதும் காலத்தின் கண்ணதும் ஒழி யிசைக்
கண்ணதும் என மூன்று கூற்றதாம் என்ப தில் என்னும் இடைச்சொல்,
எ-று.

உ-ம் : 1. “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
  பெறுகதில் லம்ம யானே”              (குறுந். 14)

இது விழைவு.

2. “பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே”

என்பது காலம்.

3. “வருகதில் லம்மவெஞ் சேரி சேர”

என்பது ஒழியிசை.

ஆதி.

1 உ-ம் : பரிசுச் சீட்டின் பணம் பெறுகதில் யானே - விழைவு.
பெற்றதில் மகிழ்க அவனே - காலம் (பெற்ற நாளில்)
வருகதில் அவன் - ஒழியிசை - வந்தால் அடிப்பேன்.

கொன்
 

249.

அச்சம் பயமிலி காலம் பெருமையென்
றப்பா னான்கே கொன்னைச் சொல்லே.

(அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று
அ பால் நான்கே கொன்னைச் சொல்ஏ)                 (6)
 

1. இவ்வாறு   உலகவழக்கில்  கூறுதல்  இல்லை.  இவர்  காட்டும்
இடைச்சொல்லாட்சி  பற்றிய  உலக வழக்கில் உள்ளன கொள்க.
இல்லன உதாரணம் ஆகா எனத் தள்ளுக. இவ்விடைச் சொற்கள்
பெரும்பாலும்    செய்யுளிலேயே   காணப்படுவன.   ஆதலின்
உரையாளர்  யாவரும் செய்யுள் உதாரணங்களே காட்டினர்.