யான் ஒப்பில் வழியாற் பொருள் செய்தன. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. நச். இதுவுமது. இ-ள் : கொன்னைச் சொல் அச்சம் பயமிலி காலம் பெருமை என்று அப்பால் நான்கே- கொன்னச் சொல் அச்சப் பொருள் பயமின்மைப் பொருள் காலப் பொருள் பெருமைப் பொருள் என்று கூறப்பட்ட அக்கூற்று நான்கேயாம், எ-று. உ-ம் : ‘கொன்முனை யிரவூர் போல’ என அச்சமும், ‘கொன்னே கழிந்தன் றிளமையும்’ எனப் பயம் இன்மையும், ‘கொன் வரல் வாடை’ எனக் காதலின் நீங்கிய காலமறிந்து வருதலையுடைய வாடை எனக் காலமும், ‘கொன்னூர் துஞ்சினும்’ எனப் பெருமையும் உணர்த்திற்று. கல். என்-எனின், இதுவும் அது. இ-ள் ; அச்சத்தின் கண்ணும், பயனின்மைக்கண்ணும் காலத்தின் கண்ணும், பெருமைக் கண்ணும் என அக் கூறு நான் காம் கொன்னைச் சொல் எ-று. உ-ம் ; ‘கொன்முனை யிறவூர்’ என்பது அச்சம். ‘கொன்னே வந்தான்’ என்பது பயனின்மை. ‘கொன் வரல் வாடை நினதெனக் கொண்டேனோ’ என்பது காலம், ‘கொன்னூர் துஞ்சினும்’ என்பது பெருமை. ஆதி. 1 உ-ம் : கொன்படை வீரர் - அச்சம்தரும் கொன்னே கழிந்தது என் வாழ்நாள் - வீணாக கொன் பொருள் வரவு பயன்பட்டது - காலத்தில் வந்தது. கொன் நகர் - பெருநகர்.
1. உதாரணம் செய்யுளிலிருந்து காட்டலே சிறந்தது இடைச் சொல் பற்றித் தொல்காப்பியர், தொல்காப்பிய மொழியியல் பக். 238. |