சொல்லதிகாரம் - இடையியல்60

1 “ஐதேய்ந்தன்று   பிறையும்   அன்று,   மைதீர்ந்தன்று   மதியுமன்று,
வேய   மன்றன்று   மலையுமன்று,  பூவமன்றன்று சுனையுமன்று” (கலி.
55)  என்பதும்  அது.  நெடியனும் வலியனுமாயினான் என்பது ஆக்கம்.
“ செப்பே   வழீஇயினும்   வரைநிலை  யின்றே”  (கிளவி 15) என்பது
இலக்கணம் ஆக்கிக் கோடல் குறித்தமையின் ஆக்கமுமாம்.

கல்

என் - எனின் இதுவுமது.

இ-ள் :  எச்சத்தின்  கண்ணுதும்  சிறப்பின்  கண்ணதும் ஐயத்தின்
கண்ணதும்   எதிர்மறைக்கண்ணதும்  முற்றின்  கண்ணதும் எண்ணிண்
கண்ணதும்   தெரிநிலைக்  கண்ணதும்  ஆக்கத்தின்  கண்ணதும் என
அக்கூறு எட்டாம் உம் என்னுஞ்சொல், எ-று.

எச்சம்  இறந்தது  தழீஇயதும்   எதிரது  தழீஇயதும்   என   இரு
வகைத்து.   அவையாவன:  யான்  கருவூர்க்குச் செல்வேன்’ என்றாற்கு
‘யானும்   அவ்வூர்க்குப்  போதுவல்’ என்பதும், அவ்வாறு கூறினார்க்கு
‘யானும் உறையூர்க்குப் போதுவல்’, என்பதூஉம் என இவை.

இனிச்சிறப்பு :  உயர்வுச்  சிறப்பும்  இழிவு  சிறப்பும்   என  இரு
வகைத்து.  உயர்வு, ‘தேவர்க்கும் வேம்பு கைக்கும்’ என்பது.  ‘ஊருக்கும்
அணித்தே   பொய்கை’   என்பதும்  அது  இழிபு அவ்வூர்ப் பூசையும்
புலால் தின்னாது என வரும்.

ஐயம் : பத்தும் எட்டும் உள என்பது.

எதிர்மறை :  ‘கொற்றன்    வருதற்கும்     உரியன்’    என்பது,
இவ்வெதிர்மறை    ‘அஃறிணை   விரவுப்  பெயர்  இயல்புமாருளவே”
(தொல்.  எழு.  தொகை.)   எனப்பண்பு  பற்றியும் வரும். எச்சத்தோடு
இதனிடை    வேற்றுமை     என்னையெனின்,    அது    பிறிதோர்
பொருளினைத்   தழுவும்;  இஃது  அப்பொருட்டானும்  ஒரு கூற்றைத்
தழுவும் என்பது.


1. பொருள் : நுதல் வியப்பை யுடைத்தாய்த் தேய்ந்தது, ஆயினும்
பிறையும்  அன்று,  முகம் மறுவற்றது, ஆயினும் மதியும் அன்று;
தோள்  வேயின்தன்மை  நெருங்கிற்று,  அது  பிறக்கும்  இடம்
அன்று;  கண்  பூவின்  தன்மை  நெருங்கிற்று,  அது  பிறக்கும்
இடமன்று.