சொல்லதிகாரம் - இடையியல்62

சாத்தன்  வருதற்கும்  உரியன் என்பது வாராமைக்கும் உரியன்
எனப்பொருள்    தருமிடத்து    எதிர்மறையும்மை,     வந்து
உண்ணுதற்கும் உரியன் பேசுதற்கும் உரியன்   எனப் பொருள்
தரின் எச்சவும்மையாம்.

  1. முத்தமிழுங்கற்றான் என்பது முற்றும்மை.

  2. நிலனும்  நீரும்   தீயும்  வளியும் காயமும்   எனப்பூதமைந்து
    என்பது எண்ணும்மை.

  3. இருநிலம்  அடிதோய்தலின் திருமகளும் அல்லள். அரமகளும்
    அல்லள்,   இவள்   யாராகும்; என ஆய்வின் கண் வருதலின்
    தெரிநிலை உம்மை,   ஆய்வின்பயன்  பின்னர் மானிடமகளே
    எனத்துணிதலாம்.

  4. செந்தமிழால்    வையினும்  உவக்கும்   சேயோன்,   என்புழி
    வைதலை    வாழ்த்தாக    எண்ணிக்    கோடலின்   ஆக்க
    உம்மையாம்.

“செப்பே வழீ இயினும் வரை நிலையின்றே” என்பது அது.


 

251.

பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ  
யிருமூன் றென்ப வோகா ரம்மே.                 (8)

(பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன்று என்ப ஓகாரம் ஏ).

 

ஆ. மொ :

இல.

The   scholars say that ‘d’ denotes six senses  which are
separation,   interrogativeness,   inference,   clearness   and
greatness.

ஆல்.

The morpheme |d| goes with the six expressions of doubt,
interrogation negation, implication, explicitness and distinction.