சொல்லதிகாரம் - இடையியல்66

‘மாறுகொள்  எச்சமும்  வினாவும்  ஐயமும்’ (உயிர்மய.88) என்னுஞ்
சூத்திரத்தால்  ஐயமும்  கொண்டார்.  அது, ‘பத்தோ  பதினொன்றோ?’
எனவரும்.

கல்.

என்- எனின், இதுவும் அது.

இ-ள் : பிரிநிலைப் பொருண்மை, வினாப்பொருண்மை, எதிர்மறைப்
பொருண்மை,   ஒழியிசைப்  பொருண்மை,  தெரிநிலைப் பொருண்மை,
என  இவற்றைச்  சிறப்புப் பொருண்மை யோடு தொகுத்து ஆறு என்று
சொல்லுப ஆசிரியர், ஓகாரத்துப் பொருண்மை, எ-று.

உ-ம் : பிரிநிலை : அவனோ   கொண்டான்   என்பது     இஃது
இப்போது வினாவாய் நடக்கின்றதெனவுணர்க.

இனிவினா : ‘அவனோ அல்லனோ’
இனி எதிர்மறை : ‘யானோ கொள்வேன்’ என்பது.
இனி ஒழியிசை : ‘கொளலோ கொண்டான்’ என்பது,
இனித் தெரிநிலை : நன்றோ வன்று; தீ தோவன்று’ என்பது
இனிச் சிறப்பு : ‘ஓ பெரிது’ என்பது.

ஆதி.

உ-ம் : இவனோ திருடன் - பிரிநிலை
இவனோ திருடன் - வினா
இவனோ திருடன் - எதிர்மறை
பிச்சைக்கோ வந்தான் - ஒழியிசை (திருட)
ஆணோவன்று : பெண்ணோவன்று - தெரிநிலை
ஓ! நன்கு படித்தாய் - சிறப்பு

இசரயேல்.

அன்னையோ யாம்எம் மகளைப்  பாராட்டக்  கதுமென (கலி. 85) -
வியப்பு.

கேளாய் வாழியோ மகளை  நின்தோழி (அகம், 63) - அசை நிலை.
(இடையும் உரியும் பக். 21)

  
 

252.

தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
யீற்றிசை யிவ்வைந் தேகா ரம்மே.                (9)

(தோற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்ஐந்து ஏகாரம் ஏ.)