இ-ள் : தேற்றப் பொருண்மை வினாப் பொருண்மை பிரிநிலைப் பொருண்மை எண்ணுப் பொருண்மை ஈற்றசையாதல் என இவ்வைந்து வகைப்படும் ஏகாரம், எ-று. உ-ம் : தேற்றம் - அவனே கொண்டாய் இனி வினா : நீயே கொண்டாய். இனிப்பிரிநிலை : அவனே கொண்டான் இனிஎண் : நிலனே நீரே தீயே வளியே இனி ஈற்றசை : ‘கடல் போல் தோன்றல காடிறந் தோரே’. ஈற்றசை என்றமையான் மொழிமுதற்கண் அசையாகாது என்பது. ஆதி. உ-ம் : ஒன்றே தெய்வம் - தேற்றம் இவனே திருடன் - வினா இவனே திருடன் - பிரிநிலை மானே மரமே மயிலே குயிலே - என எண் இயம்புவன் எழுத்தே - ஈற்றசை பொன். கோதண்டராமன். இவர் ஏகாரம் தரும் பலபொருள்களையும் தொகுத்துக் கூறியுள்ளார். அவை உதாரணங்களுடன் வருமாறு :- 1. எதிர்மறை - அவர் வாரிவாரிக் கொடுப்பாரே என்ற வழிச் சிறிதும் கொடார் என்ற பொருளில் நிற்றலின் எதிர் மறையாயிற்று. 2. கருதல் : - ‘அவர் இன்று இங்கு வருவரே’ என்றவழி அவர் எப்போதும்போல இன்றும் வருவார் என்று கருதுவதைக் குறித்து நிற்றலின் கருதலாயிற்று. 3. 1விலக்கு - ‘அவரே போகட்டும்’ என்றவழிப் பிறர் போக வேண்டா அவரே போகட்டும் என்று பொருள் பயத்தலின் இது விலக்காயிற்று. அவரே போகட்டும் என்று மற்றவரை விலக்குதல் காண்க. 4. மிகை - ‘இதன் பொருள் ஆசிரியர்க்கே தெரியாது” என்றவழி மிகைப்படுத்திக் கூறிய குறிப்புக் காணப்படுதலின் இது மிகை. ‘பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்பதும் அது.
1. இதுபிரிநிலையின் பாற்படும். |