சொல்லதிகாரம் - இடையியல்72

14. எதிர்ப்பு   - இதைச் செய்வாயா என்று வேண்டிய ஒருவனிடம்
‘முடியேவே  முடியாது’  என்று  மற்றவன்  கூறும்  வழி ஏகாரம்
எதிர்ப்பு உணர்ச்சி தோன்ற நிற்றலின் இஃது எதிர்ப்பு.

15. ஒப்புதற்குறிப்பு - ‘அவர்தானே  இங்கிருக்கிறார்.    என்றவழிக்
கேட்கப்பட்டார் ‘ஆம்’ என்று ஒப்ப வேண்டும்  என்ற  குறிப்பு
இருப்பின் அஃது ஒப்புதற் குறிப்பு.

16. ஒப்புமை   நோக்கு - ‘இந்தச்  சிறுவன்  இவ்வளவு  படித்தால்
பெரியவர்  எவ்வளவு  படிக்கலாம்’  என்ற   கருத்தோடு ‘இந்த
சிறுவனே இவ்வளவு  படிக்கிறான்’  என்புழி  ஏகாரம்  ஒப்புமை
நோக்கு,    ஐந்து    வயதிலே யே     இவனுக்கு   இவ்வளவு
அறிவிருக்கிறது என்பதும் அது.

17. ஒருமை நாட்டம் - ‘குழந்தை  விளக்கையே  பார்க்கிறது’ என்ற
வழி ஏகாரம் ஒருமை நாட்டத்தை நன்கு  புலப்படுத்தி நிற்றலின்
இங்கு அஃது ஒருமை நாட்டம்.

18. கழிந்ததற்கிரங்கல் - அவர் இந்தப் போட்டியில் தோற்றுப்போய்
விட்டாரே. அவர்க்குப்  பயித்தியம்   பிடித்துவிட்டதே,   நான்
குழந்தையையடித்து  விட்டேனே - என   இவ்வாறு   வருவன
கழிந்ததற்கிரங்கற் பொருண்மைய.

19. எய்துவதஞ்சல் - மழையில்   நனைந்தால்   காய்ச்சல்  வருமே,
நெருப்பைத்  தொட்டால்  சுட்டு   விடுமே,  இரவில்  தனியாக
விட்டால் குழந்தை   பயந்து   விடுமே.   என்பன  போல்வன
எய்துவது அஞ்சல்.

20. எடுத்து மொழிதல் - தனக்குத்   தெரியும்  என்பதை  எடுத்துச்
சொல்ல எண்ணிய  ஒருவன் ‘எனக்கு இது தெரியுமே’ என்றவழி
அஃது எடுத்து மொழிதல்.

(இலக்கணவுலகில் புதிய பார்வை-பக் . 110 -113)  

பால.

கருத்து : ஏகார   இடைச்சொல்லின்    பொருட்குறிப்பு    இவை
என்கின்றது.

பொருள் : ஏ,    என்னும்  இடைச்சொல்   தெளிவும்,  வினாவும்
பிரிநிலையும்   எண்ணாதலும்   ஈற்றசையும்    என  ஐந்து  பொருட்
கூறுபாடாகும்.