‘ஒல்லென ஒலிக்கும் ஒலிபுனலூரற்கு’ (ஐந்திணையைம்பது 28) எனவும், பச்சென்று பசுத்தது எனவும், நிலனென்று நீரென்று தீயென்று எனவும், பாரியென் றொருவன் உளன் எனவும் வரும். தெய். இதுவுமது. இ-ள் : என்று என்னும் இடைச்சொல்லும் மேற்சொல்லப்பட்ட அறுவகைப் பொருண்மையும் குறித்து நிற்கும், எ-று. உ-ம் : கொள்ளென்று கொடுத்தான் துண்ணென்று துடித்தது ஒல்லென்று ஒலித்தது பச்சென்று கிடந்தது நிலனென்று நீரென்று சினத்தைப் பொருளென்று கொண்டவன் (குறள் 307) என வரும். இது மாட்டேற்று வகையான் எச்ச வாய்பாட்டதென்று கொள்க. இச்சொற்களானும் செய்யும் என்பதன்கண் உம் இடைச்சொல்லாயினவாறு கண்டு கொள்க. நச். இதுவுமது. இ-ள் : என்று என் கிளவியும் அதன் ஓர் அற்றே- என்று என்னும் இடைச்சொல்லும் என என்பதுபோல அவ்வாறு பொருளுங் குறித்து வரும், எ-று. உ-ம் : ‘கரைவரும் என்றெண்ணி’ (நாலடி.11) விண்ணென்று விசைத்தது ‘ஒல்லென ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ (ஐந். ஐம். 28) பச்சென்று பசந்தது நிலனென்று நீரென்று பாரியென்றொருவ னுளன் என வரும். |