இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குவன உணர்த்தினார்; இனி மற்று என்பதோர் இடைச்சொல் வினைமாற்றும் அசை நிலையுமாய் வரும் என்பது உணர்த்துகின்றார். வ-று ; ‘இஃது உண்’ என்றார்க்கு, 1 ‘மற்று உண்பன்’ என வினைமாற்று ஆயிற்று. யாவரோ டாயினும் சொல்லாடா நின்று ‘மற்றோமற்று’ என்னும் இடையே; இஃது 2 அசை நிலைக் கட்டுரை. சேனா. இ-ள் : மற்று என்னும் சொல் வினைமாற்றும் அசைநிலையும் என இரண்டாம், எ-று. உ-ம் : ‘மற்றறிவாம் நல்வினை’ (நாலடி.1) என்ற வழி ‘அறஞ் செய்தல் பின் அறிவாம்’ என அக்காலத்து வினை மாற்றுதலான் மற்று என்பது வினை மாற்றின்கண் வந்தது. 3 ‘அது மற்றவலங் கொள்ளாது நொதுமலற் கலுழும்’ (குறுந்.12) என அசைநிலையாய் வந்தது. கட்டுரை இடையும் ‘மற்றோ’ என அசைநிலையாய் வரும். தெய். ஒரு பொருள் குறித்த இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மற்று என்னும் இடைச்சொல் ஒரு வினையை மாற்றுதற் பொருட்கண்ணும் அசைநிலையாகியும் வரும், எ-று. உ-ம் : ‘மற்றறிவா நல்வினை யாமிளையம்’ (நாலடி. 19) என்றவழி ‘மற்று’ என்பது ‘பின்பு அறிவாம்’ என அக்
1. மற்று உண்பன- இப்பொழுது உண்ணேன் பிறகு உண்பேன் என அப்பொழுது உண்ணும் வினையை மாற்றுதலின் வினைமாற்று. 2. அசைநிலைக் கட்டுரை : பேசும்போது கூறப்படும் அசைநிலை. கட்டுரை - வழக்கு. 3. பொருள் : இவ்வூர் அவ்வழியின் கொடுமை பற்றித் துயரம் கொள்ளாமல் அயலான் சொற்களைக்கூறி இடித்துரைக்கும். |