கற்பியல்
 
140. கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே.
உரை
   
141. கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்து உடன் போகிய காலையான.
உரை
   
142. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே
உரை
   
143. 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.
உரை
   
144. கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்
நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பொருமையின் நிலைஇக்1
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும்
நாமக் காலத் துண்டெனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமோ டளைஇச்2
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவுந் தொடுத்தற்3கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமர லுள்ளமொ டளவிய இடத்தும்
அந்தரத் தெழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்
அழியல்அஞ்சலென் றாயிறு பொருளினுந்
தானவட் பிழைத்த பருவத் தானும்
நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப்4
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னி னாகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்தபுனிறுதீர்5பொழுதின்.
நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது6
உயங்குவனள்7 கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல் 8முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லன் சீறடி புல்லிய இரவினும்
உறலருங் குரைமையின் 9 ஊடன்மிகுத் தோளைப்
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பரிவு நீக்கிய10பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளுஞ்
சென்றுகை இகந்துபெயர்த் துள்ளிய வழியுங்
காமத்தின் வலியுங் கைவிடின் அச்சமுந்
தானவட் பிழைத்த நிலையின் கண்ணும்
உடன்சேறற் செய்கையொ டன்னவை பிறவும்
மடம்பட வந்த தோழிக் கண்ணும்
வேற்றுநாட்டகல்வயின் விழுமத்தானும்
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்
அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப்பாகர் பாங்கினுங்
காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிருஞ்
சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
அருந்தொழில் முடித்த செம்மற் காலை
விருந்தோடு நல்லவை வேண்டற் கண்ணும்
மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇப்11
பண்ணமைபகுதிமுப் பதினொரு மூன்றும்
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.
உரை
   
145. `அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்,
ஏற்றற்கண்ணும்; நிறுத்தற்கண்ணும் ;
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
பெருமையின் திரியா அன்பின்கண்ணும் ;
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்,
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் ;
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் ;
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியின் நீக்கிய இளி வரு நிலையும்;
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி,
இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி,
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்;
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி,
"எங்கையர்க்கு உரை!" என இரத்தற்கண்ணும் ;
செல்லாக் காலை, 'செல்க!' என விடுத்தலும்;
காமக்கிழத்தி தன் மகத் தழீஇ,
ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும் ;
சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி,
அறம் புரி நெஞ்சமொடு, தன் வரவு அறியாமை,
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும் ;
"தந்தையர் ஒப்பர் மக்கள்" என்பதனால்,
அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்;
"கொடியோர் கொடுமை சுடும்!" என ஒடியாது,
நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ,
பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்;
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி,
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி,
"காதல் எங்கையர் காணின் நன்று!" என,
மாதர் சான்ற வகையின்கண்ணும்;
தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்;
தன்வயின் சிறைப்பினும்; அவன் வயின் பிரிப்பினும்;
இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்;
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்;
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை
வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை,
காய்தலும் உவத்தலும், பிரித்தலும் பெட்டலும்,
ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்;
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ,-
கிழவோள் செப்பல் கிழவது' என்ப.
உரை
   
146. புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து,
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி,
அன்புறு தக்க கிளத்தல்தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும்.
உரை
   
147. தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்,
ஆவயின் நிகழும்' என்மனார் புலவர்.
உரை
   
148. பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த
தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்;
அற்றம் அழிவு உரைப்பினும், அற்றம் இல்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்,
சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்,
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும்;
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி,
இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்;
வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்;
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்;
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்,
"மாண் நலம் தா" என வகுத்தற்கண்ணும்;
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்,
சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்,
"பெரியோர் ஒழுக்கம் பெரிது!" எனக் கிளந்து
பெறு தகை இல்லாப் பிழைப்பினும், அவ் வழி
உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்;
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்;
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எளிமைக் காலத்து இரக்கத்தானும்;
பாணர், கூத்தர், விறலியர், என்று இவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்;
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்,
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்;
பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய
மரபுடை எதிரும் உளப்பட, பிறவும்,
வகை பட வந்த கிளவி எல்லாம்-
தோழிக்கு உரிய' என்மனார் புலவர்.
உரை
   
149. புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்,
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்,
பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்,
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்,
காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்
தாய்போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்
காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்,
இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
பின்னர் வந்த வாயிற்கண்ணும்,
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்,
எண்ணிய பண்ணை, என்று இவற்றொடு பிறவும்-
கண்ணிய காமக்கிழத்தியர் மேன.
உரை
   
150. "கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல் இயல் பொறையும், நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய.
உரை
   
151. கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள,
நல்லவை உரைத்தலும், அல்லவை கடிதலும்,
செவிலிக்கு உரிய ஆகும் என்ப.
உரை
   
152. சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. உரை
   
153. இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்,
கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின்.
உரை
   
154. உணர்ப்பு வரை இறப்பினும், செய் குறி பிழைப்பினும்,
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய.
உரை
   
155. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்,
சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய.
உரை
   
156. பரத்தை மறுத்தல் வேண்டியும், கிழத்தி
மடத் தகு கிழமை உடைமையானும்,
'அன்பிலை! கொடியை!' என்றலும் உரியள்.
உரை
   
157. அவன் குறிப்பு அறிதல் வேண்டியும், கிழவி
அகம் மலி ஊடல் அகற்சிக் கண்ணும்,
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.
உரை
   
158. காமக் கடப்பினுள் பணிந்த கிளவி,
காணும் காலை, கிழவோற்கு உரித்தே-
வழிபடு கிழமை அவட்கு இயலான.
உரை
   
159. அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி
பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.
உரை
   
160. களவும் கற்பும் அலர் வரைவு இன்றே உரை
   
161. அலரின் தோன்றும், காமத்து மிகுதி. உரை
   
162. கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. உரை
   
163. மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை
உரை
   
164. மனைவி முன்னர்க் கையறு கிளவி,
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே.
உரை
   
165. 'முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும்' என்மனார் புலவர்.
உரை
   
166. தொல்லவை உரைத்தலும், நுகர்ச்சி ஏத்தலும்,
பலாற்றானும் ஊடலின் தகைத்தலும்,
உறுதி காட்டலும், அறிவு மெய்ந் நிறுத்தலும்,
ஏதுவின் உரைத்தலும், துணிவு காட்டலும்,
அணி நிலை உரைத்தலும்-கூத்தர் மேன.
உரை
   
167. நிலம் பெயர்ந்து உரைத்தல், அவள் நிலை உரைத்தல்,
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய.
உரை
   
168. 'ஆற்றது பண்பும், கருமத்து விளைவும்,
ஏவல் முடிவும், வினாவும், செப்பும்,
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்,
தோற்றம் சான்ற அன்னவை பிறவும்,-
இளையோர்க்கு உரிய கிளவி' என்ப.
உரை
   
169. உழைக் குறுந்தொழிலும், காப்பும், உயர்ந்தோர்
நடக்கை எல்லாம் அவர்கண் படுமே.
உரை
   
170. 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்
தொல் முறை மனைவி எதிர்ப்பாடுஆயினும்,
இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்,
இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்
கலங்கலும் உரியன் என்மனார் புலவர்.
உரை
   
171. 'தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து' என மொழிப-
'கவவொடு மயங்கிய காலையான'
உரை
   
172. 'அவன் சோர்பு காத்தல் கடன்' எனப்படுதலின்,
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்-
செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான.
உரை
   
173. எண் அரும் பாசறை, பெண்ணொடு புணரார். உரை
   
174. புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். உரை
   
175. காம நிலை உரைத்தலும், தேர் நிலை உரைத்தலும்,
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்,
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்,
செலவு உறு கிளவியும், செலவு அழுங்கு கிளவியும்,
அன்னவை பிறவும்-பார்ப்பார்க்கு உரிய.
உரை
   
176. எல்லா வாயிலும், இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள' என்ப.
உரை
   
177. அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்று' என்மனார் புலவர்.
உரை
   
178. தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்
எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை-
முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே.
உரை
   
179. கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய' என்ப.
உரை
   
180. மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே. உரை
   
181. குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும். உரை
   
182. துன்புறு பொழுதினும், எல்லாம் கிழவன்
வன்புறுத்தல்லது சேறல் இல்லை.
உரை
   
183. செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே;
வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும்.
உரை
   
184. கிழவி நிலையே வினையிடத்து உரையார்;
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்.
உரை
   
185. பூப்பின் புறப்பாடு ஈர்-ஆறு நாளும்
நீத்து அகன்று உறையார்' என்மனார் புலவர்-
பரத்தையின் பிரிந்த காலையான.
உரை
   
186. வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது. உரை
   
187. வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே. உரை
   
188. ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும். உரை
   
189. யாறும் குளனும் காவும் ஆடி,
பதி இகந்து நுகர்தலும் உரிய' என்ப.
உரை
   
190. காமம் சான்ற கடைக்கோட் காலை,
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி,
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.
உரை
   
191. தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்,
பாணன், பாடினி, இளையர், விருந்தினர்,
கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர்,
யாத்த சிறப்பின் வாயில்கள்' என்ப.
உரை
   
192. வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை,
இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை-
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள் இயல் கலி மா உடைமையான.
உரை