| தொடக்கம் | ||
| மொழியிறுதி எழுத்துக்கள்
|
||
| 69. | உயிர், `ஒள' எஞ்சிய இறுதி ஆகும். | உரை |
| 70. | கவவொடு இயையின், ஒளவும் ஆகும். | உரை |
| 71. | எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. | உரை |
| 72. | ஒவ்வும் அற்றே, `ந' அலங்கடையே. | உரை |
| 73. | ஏ, ஓ, எனும் உயிர் ஞகாரத்து இல்லை. | உரை |
| 74. | உ, ஊகாரம் நவவொடு நவிலா. | உரை |
| 75. | உச் சகாரம் இருமொழிக்கு உரித்தே. | உரை |
| 76. | உப் பகாரம் ஒன்று' என மொழிப; இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. |
உரை |
| 77. | எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. | உரை |
| 78. | ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்னும் அப் பதினொன்றே புள்ளி இறுதி. |
உரை |
| 79. | உச் சகாரமொடு நகாரம் சிவணும். | உரை |
| 80. | உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே; அப் பொருள் இரட்டாது இவணையான. |
உரை |
| 81. | வகரக் கிளவி நான்மொழி ஈற்றது. | உரை |
| 82. | மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப புகர் அறக் கிளந்த அஃறிணை மேன |
உரை |