உயிரெழுத்துக்கள் பொதுவாகப் பிறக்குமாறு
 
84. அவ் வழி,
பன்னீர்-உயிரும் தம் நிலை திரியா,
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.
உரை
   
85. அவற்றுள்,
அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.
உரை
   
86. இ, ஈ, எ, ஏ, ஐ, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன;
அவைதாம்
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
உரை
   
87. உ, ஊ, ஒ, ஓ, ஓள, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
உரை
   
88. தம்தம் திரிபே சிறிய என்ப. உரை
   
89. ககார ஙகாரம் முதல் நா அண்ணம். உரை
   
90. சகார ஞகாரம் இடை நா அண்ணம். உரை
   
91. டகார ணகாரம் நுனி நா அண்ணம். உரை
   
92. அவ் ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின. உரை
   
93. அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற,
தாம் இனிது பிறக்கும்-தகார நகாரம்.
உரை
   
94. அணரி நுனி நா அண்ணம் ஒற்ற,
றஃகான், னஃகான், ஆயிரண்டும் பிறக்கும்.
உரை
   
95. நுனி நா அணரி அண்ணம் வருட,
ரகார, ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
உரை
   
96. நா விளிம்பு வீங்கி, அண்பல் முதல் உற,
ஆவயின் அண்ணம், ஒற்றவும், வருடவும்,
லகார, ளகாரம், ஆயிரண்டும் பிறக்கும்.
உரை
   
97. இதழ் இயைந்து பிறக்கும்-பகார, மகாரம். உரை
   
98. பல் இதழ் இயைய, வகாரம் பிறக்கும். உரை
   
99. அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய, யகாரம் பிறக்கும்.
உரை
   
100. மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்,
மூக்கின் வளிஇசை யாப்புறத் தோன்றும்.
உரை