மாத்திரை
 
3. அவற்றுள்
`அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப.
உரை
   
4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து' என்ப.
உரை
   
5. மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. உரை
   
6. நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய
கூட்டி `எழூஉதல்' என்மனார் புலவர்.
உரை
   
7. கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை-
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.
உரை