சாரியைப் புணர்ச்சி
 
119. அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. உரை
   
120. அவைதாம்,
இன்னே, வற்றே, அத்தே, அம்மே,
ஒன்னே, ஆனே, அக்கே, இக்கே,
.அன் என் கிளவி உளப்பட, பிறவும்
அன்ன' என்ப-'சாரியை மொழியே'.
உரை
   
121. அவற்றுள்,
இன்னின் இகரம் ஆவின் இறுதி
முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும்.
உரை
   
122. அளவு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே.
உரை
   
123. வஃகான் மெய் கெட, சுட்டு முதல் ஐம் முன்,
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே.
உரை
   
124. னஃகான், றஃகான் நான்கன் உருபிற்கு. உரை
   
125. ஆனின் னகரமும் அதன் ஓரற்றே,
நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே.
உரை
   
126. அத்தின் அகரம் அகர முனை இல்லை. உரை
   
127. இக்கின் இகரம் இகர முனை அற்றே. உரை
   
128. ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும். உரை
   
129. எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
அக்கின் இறுதி மெய்ம் மிசையொடும் கெடுமே;
குற்றியலுகரம் முற்றத் தோன்றாது.
உரை
   
130. அம்மின் இறுதி, க, ச, த-க் காலை,
தன் மெய் திரிந்து, ங, ஞ, ந, ஆகும்.
உரை
   
131. மென்மையும் இடைமையும் வரூஉம் காலை
இன்மை வேண்டும்' என்மனார் புலவர்.
உரை
   
132. இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு
இன் என் சாரியை இன்மை வேண்டும்.
உரை
   
133. பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப,
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்,
தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்,
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி,
சொற் சிதர் மருங்கின், வழி வந்து விளங்காது
இடை நின்று இயலும், சாரியை இயற்கை;
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்.
உரை
   
134. அத்தே, வற்றே, ஆயிரு மொழிமேல்
ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே;
அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே.
உரை