தொடக்கம் | ||
உயிரீறு மெய்யீறுகளின் பொதுப் புணர்ச்சி
|
||
144. | க, ச, த, ப, முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான், ங, ஞ, ந, ம என்னும் ஒற்று ஆகும்மே- அன்ன மரபின் மொழிவயினான. |
உரை |
145. | ஞ, ந, ம, ய, வ, எனும் முதல் ஆகு மொழியும், உயிர் முதல் ஆகிய மொழியும், உளப்பட, அன்றி அனைத்தும், எல்லா வழியும், நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே. |
உரை |
146. | அவற்றுள், மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்- சொல்லிய தொடர்மொழி இறுதியான. |
உரை |
147. | ண, ன, என் புள்ளி முன், யாவும் ஞாவும், வினை ஓரனைய' என்மனார் புலவர். |
உரை |
148. | மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும் வருவழி, நின்ற ஆயிரு புள்ளியும் வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே. |
உரை |
149. | வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி, மேற் கூறு இயற்கை ஆவயினான. |
உரை |
150. | வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி, மேற் கூறு இயற்கை ஆவயினான. |
உரை |
151. | ண, ள, என் புள்ளி முன் ட, ண, எனத் தோன்றும். | உரை |