தொடக்கம் | ||
உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி
|
||
152. | உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும், புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்,- இயல்பு ஆகுநவும், உறழ்பு ஆகுநவும், என்று ஆயீர் இயல-வல்லெழுத்து வரினே. |
உரை |
153. | ஒள என வரூஉம் உயிர் இறு சொல்லும், ஞ, ந, ம, வ, என்னும் புள்ளி இறுதியும், குற்றியலுகரத்து இறுதியும், உளப்பட- முற்றத் தோன்றா-முன்னிலை மொழிக்கே. |
உரை |
154. | 'உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும், புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும், எல்லா வழியும், இயல்பு' என மொழிப. |
உரை |
155. | அவற்றுள், இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. |
உரை |
156. | அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. | உரை |
157. | புள்ளி இறுதியும், உயிர் இறு கிளவியும், வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான், தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின், மெய்ம்மை ஆகலும், உறழத் தோன்றலும், அம் முறை இரண்டும் உரியவை உளவே; வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். |
உரை |
158. | 'மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும், வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும், உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும், சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும், சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும், சாரியை இயற்கை உறழத் தோன்றலும் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் அஃறிணை விரவுப் பெயர்க்கு அ இயல் நிலையலும் மெய்பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும் அன்னபிறவும் தன் இயல் மருங்கின் மெய்பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் ஐகார வேற்றுமைத்திரிபு என மொழிப. |
உரை |
159. | 'வேற்றுமை அல் வழி, இ, ஐ, என்னும் ஈற்றுப் பெயர்க் கிளவி மூவகை நிலைய, அவைதாம், இயல்பு ஆகுநவும், வல்லெழுத்து மிகுநவும், உறழ் ஆகுநவும்' என்மனார் புலவர். |
உரை |
160. | 'சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும், எகர முதல் வினாவின் இகர இறுதியும், சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும், யா என் வினாவின் ஐ என் இறுதியும்,- வல்லெழுத்து மிகுநவும், உறழ் ஆகுநவும், சொல்லிய மருங்கின் உள' என மொழிப. |
உரை |
161. | 'நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும், குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டலும், அறியத் தோன்றிய நெறி இயல்' என்ப. |
உரை |
162. | ஆறன் உருபினு நான்கன் உருபினும் கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை ; ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும்;- நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன. |
உரை |
163. | நும் என் இறுதியும் அந் நிலை திரியாது. | உரை |
164. | உகரமொடு புணரும் புள்ளி இறுதி, யகரமும் உயிரும் வரு வழி, இயற்கை. |
உரை |
165. | 'உயிரும் புள்ளியும் இறுதி ஆகி, அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உள எனப்பட்ட எல்லாச் சொல்லும் தம்தம் கிளவி தம் அகப்பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின், ஒத்தது' என்ப, `ஏ என் சாரியை'. |
உரை |
166. | `அரை' என வரூஉம் பால் வரை கிளவிக்கு, புரைவது அன்றால், சாரியை இயற்கை. |
உரை |
167. | `குறை' என் கிளவி முன் வரு காலை, நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. |
உரை |
168. | குற்றியலுகரக்கு இன்னே சாரியை. | உரை |
169. | அத்து இடை வரூஉம், `கலம்' என் அளவே. | உரை |
170. | 'பனை' என் அளவும், `கா' என் நிறையும், நினையும் காலை, இன்னொடு சிவணும். |
உரை |
171. | 'அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி உள எனப்பட்ட, ஒன்பதிற்று எழுத்தே; அவைதாம், க, ச, த, ப, என்றா; ந, ம, வ, என்றா; அகர உகரமொடு அவை' என மொழிப. |
உரை |