தொடக்கம் | ||
புறனடை
|
||
172. | 'ஈறு இயல் மருங்கின், இவை இவற்று இயல்பு' எனக் கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம் மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி, ஒத்தவை உரிய, புணர் மொழி நிலையே. |
உரை |
173. | பலர் அறி சொல் முன் யாவர் என்னும் பெயரிடை வகரம் கெடுதலும், ஏனை ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை ஒன்றிய வகரம் வருதலும், இரண்டும் மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. |
உரை |