மெய்யீறுகள்
 
183. ஞ, ந, என் புள்ளிக்கு இன்னே சாரியை. உரை
   
184. சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே.
உரை
   
185. ஏனை வகரம் இன்னொடு சிவணும். உரை
   
186. மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. உரை
   
187. இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. உரை
   
188. `நும்' என் இறுதி இயற்கை ஆகும். உரை
   
189. `தாம், நாம்' என்னும் மகர இறுதியும்
`யாம்' என் இறுதியும் அதன் ஓரன்ன;
ஆ எ ஆகும், யாம் என் இறுதி;
ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்;
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும்.
உரை
   
190. `எல்லாம்' என்னும் இறுதி முன்னர்,
'வற்று' என் சாரியை முற்றத் தோன்றும்;
உம்மை நிலையும் இறுதியான.
உரை
   
191. உயர்திணை ஆயின் நம் இடை வருமே. உரை
   
192. எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்,
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்,
ஒற்றும் உகரமும் கெடும்' என மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி;
உம்மை நிலையும் இறுதியான;
தம் இடை வரூஉம், படர்க்கை மேன;
நும் இடை வரூஉம், முன்னிலை மொழிக்கே.
உரை
   
193. தான், யான்' என்னும் ஆயீர் இறுதியும்
மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே.
உரை
   
194. அழனே, புழனே, ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது' என்ப, உணருமோரே.
உரை