எண்
 
8. ஒளகார இறுவாய்ப்
பன்னீர்-எழுத்தும் `உயிர்' என மொழிப.
உரை
   
9. னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் `மெய்' என மொழிப.
உரை
   
10. மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா. உரை
   
11. மெய்யின் அளபே `அரை' என மொழிப. உரை
   
12. அவ் இயல் நிலையும், ஏனை மூன்றே. உரை
   
13. அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே;
இசையிடன் அருகும், தெரியும் காலை.
உரை