தொடக்கம் | ||
ஆகார ஈறு
|
||
222. | ஆகார இறுதி அகர இயற்றே. | உரை |
223. | செய்யா என்னும் வினை எஞ்சு கிளவியும் அவ் இயல் திரியாது' என்மனார் புலவர். |
உரை |
224. | உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி மெய்ம்மையாக அகரம் மிகுமே. |
உரை |
225. | ஆவும், மாவும், விளிப்பெயர்க் கிளவியும், யா என் வினாவும், பலவற்று இறுதியும், ஏவல் குறித்த உரையசை மியாவும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு,- அன்றி அனைத்தும் இயல்பு' என மொழிப. |
உரை |
226. | வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. | உரை |
227. | குறியதன் முன்னரும், ஓரெழுத்து மொழிக்கும், அறியத் தோன்றும், அகரக் கிளவி. |
உரை |
228. | `இரா' என் கிளவிக்கு அகரம் இல்லை. | உரை |
229. | நிலா' என் கிளவி அத்தொடு சிவணும். | உரை |
230. | யா-மரக்கிளவியும், பிடாவும், தளாவும், ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. |
உரை |
231. | வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. | உரை |
232. | மா-மரக்கிளவியும், ஆவும், மாவும், ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன; அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா; னகரம் ஒற்றும் ஆவும் மாவும். |
உரை |
233. | ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. | உரை |
234. | ஆன் முன் வரூஉம் ஈகார பகரம் தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. |
உரை |
235. | குறியதன் இறுதிச் சினை கெட, உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே. |
உரை |