தொடக்கம் | ||
இகர ஈறு
|
||
236. | இகர இறுதிப் பெயர்நிலை முன்னர், வேற்றுமைஆயின், வல்லெழுத்து மிகுமே. |
உரை |
237. | இனி, அணி,' என்னும் காலையும் இடனும், வினை எஞ்சு கிளவியும், சுட்டும், அன்ன. |
உரை |
238. | இன்றி' என்னும் வினை எஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே. |
உரை |
239. | சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. | உரை |
240. | பதக்கு முன் வரினே தூணிக் கிளவி முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே. |
உரை |
241. | உரி வரு காலை, நாழிக் கிளவி இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே; டகாரம் ஒற்றும் ஆவயினான. |
உரை |
242. | பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும். |
உரை |
243. | வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ் இயல் நிலையல் செவ்விது' என்ப. |
உரை |
244. | உதி-மரக்கிளவி மெல்லெழுத்து மிகுமே. | உரை |
245. | புளி-மரக்கிளவிக்கு அம்மே சாரியை. | உரை |
246. | ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. | உரை |
247. | வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை; ஒல்வழி அறிதல், வழக்கத்தான! |
உரை |
248. | நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு ஆன் இடை வருதல் ஐயம் இன்றே. |
உரை |
249. | திங்கள் முன் வரின் இக்கே சாரியை. | உரை |