தொடக்கம் | ||
ஐகார ஈறு
|
||
281. | ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர், வேற்றுமைஆயின், வல்லெழுத்து மிகுமே. |
உரை |
282. | சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். | உரை |
283. | விசை-மரக்கிளவியும், ஞெமையும், நமையும், ஆ முப் பெயரும் சே-மர இயல. |
உரை |
284. | 'பனையும், அரையும், ஆவிரைக் கிளவியும், நினையும் காலை அம்மொடு சிவணும்; ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே, மெய் அவண் ஒழிய' என்மனார் புலவர். |
உரை |
285. | பனையின் முன்னர், அட்டு வரு காலை, நிலை இன்று ஆகும், ஐ என் உயிரே; ஆகாரம் வருதல் ஆவயினான. |
உரை |
286. | கொடி முன் வரினே, ஐ அவண் நிற்ப, கடி நிலை இன்றே, வல்லெழுத்து மிகுதி. |
உரை |
287. | திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. | உரை |
288. | 'மழை' என் கிளவி வளி இயல் நிலையும். | உரை |
289. | 'செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐ என் இறுதி அவா முன் வரினே, மெய்யொடும் கெடுதல்' என்மனார் புலவர்; டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். |
உரை |