தொடக்கம் | ||
மெல்லொற்று ஈறுகள்
|
||
297. | ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர், அல்லது கிளப்பினும், வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து இயையின், அவ் எழுத்து மிகுமே; உகரம் வருதல் ஆவயினான. |
உரை |
298. | ஞ, ந, ம, வ, இயையினும் உகரம் நிலையும். | உரை |
299. | நகர இறுதியும் அதன் ஓரற்றே. | உரை |
300. | வேற்றுமைக்கு உ-க் கெட, அகரம் நிலையும். | உரை |
301. | வெரிந்' என் இறுதி முழுதும் கெடுவழி, வரும் இடன் உடைத்தே, மெல்லெழுத்து இயற. |
உரை |
302. | ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. | உரை |
303. | ணகார இறுதி வல்லெழுத்து இயையின், டகாரம் ஆகும், வேற்றுமைப் பொருட்கே |
உரை |
304. | ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. | உரை |
305. | ஆண்-மரக்கிளவி அரை-மர இயற்றே. | உரை |
306. | விண்' என வரூஉம் காயப் பெயர்வயின், உண்மையும் உரித்தே, 'அத்து' என் சாரியை; செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை. |
உரை |
307. | தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. | உரை |
308. | கிளைப் பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. | உரை |
309. | வேற்றுமை அல்வழி, 'எண்' என் உணவுப் பெயர் வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே. |
உரை |
310. | `முரண்' என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். | உரை |
311. | மகர இறுதி வேற்றுமைஆயின், துவரக் கெட்டு, வல்லெழுத்து மிகுமே. |
உரை |
312. | அகர ஆகாரம் வரூஉம் காலை, ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே. |
உரை |
313. | மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே; செல் வழி அறிதல் வழக்கத்தான. |
உரை |
314. | இல்லம்-மரப்பெயர் விசை-மர இயற. | உரை |
315. | அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். | உரை |
316. | அகம்' என் கிளவிக்குக் 'கை' முன் வரினே, முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும், வரை நிலை இன்றே ஆசிரியர்க்க; மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. |
உரை |
317. | இலம்' என் கிளவிக்குப் படு வரு காலை, நிலையலும் உரித்தே, செய்யுளான. |
உரை |
318. | அத்தொடு சிவணும், ஆயிரத்து இறுதி- ஒத்த எண்ணு முன் வரு காலை. |
உரை |
319. | அடையொடு தோன்றினும், அதன் ஓரற்றே. | உரை |
320. | அளவும் நிறையும் வேற்றுமை இயல. | உரை |
321. | படர்க்கைப் பெயரும், முன்னிலைப் பெயரும், தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும், வேற்றுமைஆயின், உருபு இயல் நிலையும்; மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. |
உரை |
322. | அல்லது கிளப்பின், இயற்கை ஆகும். | உரை |
323. | அல்லது கிளப்பினும், வேற்றுமைக்கண்ணும், 'எல்லாம்' எனும் பெயர் உருபு இயல் நிலையும்; வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது. |
உரை |
324. | மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. | உரை |
325. | உயர்திணைஆயின், உருபு இயல் நிலையும். | உரை |
326. | `நும்' என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. | உரை |
327. | அல்லதன் மருங்கின் சொல்லும் காலை, உ-க் கெட நின்ற மெய்வயின் ஈ வர இ இடை நிலைஇ, ஈறு கெட, ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே; அப் பால் மொழிவயின் இயற்கை ஆகும். |
உரை |
328. | தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. | உரை |
329. | ஈமும், கம்மும், 'உரும்' என் கிளவியும், ஆ முப் பெயரும் அவற்று ஓரன. |
உரை |
330. | வேற்றுமைஆயின், ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும், 'அக்கு' என் சாரியை. |
உரை |
331. | வகாரம் மிசையும் மகாரம் குறுகும். | உரை |
332. | நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன; அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே; ஒற்று மெய் கெடுதல்' என்மனார் புலவர். |
உரை |
333. | னகார இறுதி வல்லெழுத்து இயையின், றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே. |
உரை |
334. | மன்னும், சின்னும், ஆனும், ஈனும், பின்னும், முன்னும், வினை எஞ்சு கிளவியும், அன்ன இயல' என்மனார் புலவர். |
உரை |
335. | சுட்டு முதல் வயினும், எகரம் முதல் வயினும், அப் பண்பு நிலையும் இயற்கைய' என்ப. |
உரை |
336. | குயின்' என் கிளவி இயற்கை ஆகும். | உரை |
337. | எகின்-மரம் ஆயின் ஆண்-மர இயற்றே. | உரை |
338. | ஏனை எகினே அகரம் வருமே; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும். |
உரை |
339. | கிளைப் பெயர் எல்லாம் கிளைப் பெயர் இயல. | உரை |
340. | மீன்' என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. | உரை |
341. | `தேன்' என் கிளவி வல்லெழுத்து இயையின், மேல் நிலை ஒத்தலும், வல்லெழுத்து மிகுதலும், ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே; வல்லெழுத்து மிகு வழி, இறுதி இல்லை. |
உரை |
342. | மெல்லெழுத்து மிகினும், மானம் இல்லை. | உரை |
343. | மெல்லெழுத்து இயையின், இறுதியொடு உறழும். | உரை |
344. | இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். | உரை |
345. | ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. | உரை |
346. | மின்னும், பின்னும், பன்னும், கன்னும், அந் நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல. |
உரை |
347. | வேற்றுமைஆயின், ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும், 'கன்' என் கிளவி. |
உரை |
348. | இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின், முதற்கண் மெய் கெட அகரம் நிலையும்; மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே. |
உரை |
349. | ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே. |
உரை |
350. | சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும். | உரை |
351. | அப் பெயர் மெய் ஒழித்து, அன் கெடு வழியே, நிற்றலும் உரித்தே, 'அம்' என் சாரியை; மக்கள் முறை தொகூஉம் மருங்கினான. |
உரை |
352. | தானும், பேனும், கோனும், என்னும் ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே. |
உரை |
353. | 'தான், யான்' எனும் பெயர் உருபு இயல் நிலையும். | உரை |
354. | வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை' என்மனார் புலவர். |
உரை |
355. | அழன்' என் இறுதி கெட, வல்லெழுத்து மிகுமே. | உரை |
356. | முன்' என் கிளவி முன்னர்த் தோன்றும் 'இல்' என் கிளவிமிசை றகரம் ஒற்றல் தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே. |
உரை |
357. | பொன்' என் கிளவி ஈறு கெட, முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம்- செய்யுள் மருங்கின் தொடர் இயலான. |
உரை |