தொடக்கம் | ||
குற்றுகர எண்ணுப் புணர்ச்சி
|
||
434. | ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி எல்லா எண்ணும் பத்தன் முன் வரின், குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே; முற்ற இன் வரூஉம், இரண்டு அலங்கடையே |
உரை |
435. | 'பத்தன் ஒற்றுக் கெட, னகாரம் இரட்டல் ஒத்தது' என்ப-'இரண்டு வரு காலை' |
உரை |
436. | ஆயிரம் வரினும், ஆயியல் திரியாது | உரை |
437. | நிறையும் அளவும் வரூஉம் காலையும், குறையாது ஆகும், 'இன்' என் சாரியை |
உரை |
438. | 'ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர், நின்ற பத்தன் ஒற்றுக் கெட, ஆய்தம் வந்து இடை நிலையும் இயற்கைத்து' என்ப; கூறிய இயற்கை குற்றியலுகரம், ஆறன் இறுதி அல் வழியான |
உரை |
439. | முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும்; உகரம் வருதல் ஆவயினான |
உரை |
440. | இடை நிலை ரகரம், 'இரண்டு' என் எண்ணிற்கு, நடை மருங்கு இன்றே, பொருள்வயினான. |
உரை |
441. | மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும் |
உரை |
442. | நான்கன் ஒற்றே றகாரம் ஆகும் | உரை |
443. | ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும் | உரை |
444. | எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும் | உரை |
445. | ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்; முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்; பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட, நிற்றல் வேண்டும், ஊகாரக் கிளவி; ஒற்றிய தகரம் றகரம் ஆகும் |
உரை |
446. | அளந்து அறி கிளவியும், நிறையின் கிளவியும், கிளந்த இயல, தோன்றும் காலை |
உரை |
447. | மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும் | உரை |
448. | ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும் | உரை |
449. | க, ச, த, ப, முதல் மொழி வரூஉம் காலை | உரை |
450. | ந, ம, வ, என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும், எட்டன் முன் இயல்பே. |
உரை |
451. | ஐந்தும் மூன்றும் ந, ம, வரு காலை, வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே |
உரை |
452. | மூன்றன் ஒற்றே வகாரம் வரு வழி, தோன்றிய வகாரத்து உரு ஆகும்மே |
உரை |
453. | நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் | உரை |
454. | ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே | உரை |
455. | 'முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு காலை, தவல்' என மொழிப-'உகரக் கிளவி' முதல் நிலை நீடல், ஆவயினான |
உரை |
456. | மூன்றும், நான்கும், 'ஐந்து' என் கிளவியும், தோன்றிய வகரத்து இயற்கை ஆகும் |
உரை |
457. | மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே- 'உழக்கு' என் கிளவி வழக்கத்தான |
உரை |
458. | 'ஆறு' என் கிளவி முதல் நீடும்மே | உரை |
459. | ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே |
உரை |
460. | நூறு முன் வரினும், கூறிய இயல்பே. | உரை |
461. | மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும் | உரை |
462. | நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா | உரை |
463. | ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்தற்றேன; முந்தை ஒற்றே காரம் இரட்டும்; நூறு என் கிளவி நகாரம் மெய் கெட, ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப; ஆயிடை வருதல் இகார ரகாரம்; ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் |
உரை |
464. | ஆயிரக் கிளவி வரூஉம் காலை, முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே |
உரை |
465. | முதல் நிலை நீடினும் மானம் இல்லை | உரை |
466. | மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும் | உரை |
467. | நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் | உரை |
468. | ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும் | உரை |
469. | ஆறன் மருங்கின் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழியக் கெடுதல் வேண்டும் |
உரை |
470. | ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது, இன் பெறல் வேண்டும், சாரியை மரபே. |
உரை |
471. | நூறாயிரம் முன் வரூஉம் காலை, நூறன் இயற்கை முதல்-நிலைக்கிளவி. |
உரை |
472. | 'நூறு' என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஈறு சினை ஒழிய, இன ஒற்று மிகுமே |
உரை |
473. | அவை ஊர் பத்தினும் அத் தொழிற்று ஆகும் | உரை |
474. | 'அளவும் நிறையும் ஆயியல் திரியா; குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும், முன் கிளந்தன்ன' என்மனார் புலவர் |
உரை |
475. | ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே; நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் |
உரை |
476. | ஆயிரம் வரினே, இன் ஆம், சாரியை; ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை |
உரை |
477. | அளவும் நிறையும் ஆயியல் திரியா | உரை |
478. | முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும், ஞ, ந, ம-த் தோன்றினும், ய, வ, வந்து இயையினும், முதல் நிலை இயற்கை என்மனார் புலவர் |
உரை |
479. | அதன் நிலை, உயிர்க்கும் யா வரு காலை, முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே; ரகரத்து உகரம் துவரக் கெடுமே |
உரை |
480. | இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர், வழங்கு இயல் 'மா' என் கிளவி தோன்றின், மகர அளவொடு நிகரலும் உரித்தே. |
உரை |